டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தமிழ் சினிமாவில் திரைப்படக்கல்லூரி மாணவர்களுக்கு ஒரு மரியாதையை ஏற்படுத்திக்கொடுத்தவர் ஆபாவாணன். அவரது ஊமை விழிகள் படத்தின் வெற்றிக்குப்பிறகுதான் திரைப்படக்கல்லூரியில் படித்து விட்டு வந்தவர்களுக்கு கோலிவுட்டில் ஒரு மரியாதை ஏற்பட்டது. ஆர்.வி.உதயகுமார், ஆர்.கே.செல்வமணி உள்பட பல இயக்குனர்கள் அடுத்தடுத்து வெற்றி பெற்றார்கள்.
ஊமைவிழிகளைத் தொடர்ந்து பல படங்களை இயக்கி இசையமைத்த ஆபாவாணன், பின்னர் படவாய்ப்பு குறைந்த நேரத்தில் சின்னத்திரைக்கு வந்தார். அப்படி அவர் இயக்கிய கங்கா யமுனா சரஸ்வதி என்ற தொடரில் ஒரு சினிமா பிரபலம் நடித்தால் தனக்கு பலமாக இருக்கும் என்று நினைத்தவர், அப்போது சினிமாவில் பிசியான நடிகராக இருந்த இயக்குனர் மணிவண்ணனிடம், ஒரு கேரக்டரில் நடித்து தருமாறு கேட்டுக்கொண்டாராம். அதற்கு அவரும், சரி என்று தலையசைத்தாராம்.
இருப்பினும், சினிமாவில் பிசியாக இருக்கிறவர் சீரியலில் எப்படி நடிப்பார் என்று அவநம்பிக்கையில்தான் இருந்தாராம் ஆபாவாணன். ஆனால் மணிவண்ணனோ, ஆபாவாணன் கேட்டுக்கொண்ட தேதியில் ஸ்பாட்டுக்கு வந்து நின்றாராம். 6 நாட்கள் நடித்தும் கொடுத்தாராம். ஆனால், அதற்கான தொகையை கொடுத்தபோது வாங்க மறுத்துவிட்டாராம். ஆபாவாணன் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை மனதளவில் இருந்தது. அந்த ஆசையை இப்போது நிறைவேற்றிக்கொண்டுள்ளேன் என்று சொன்னாராம் மணிவண்ணன்.
என்றாலும், மணிவண்ணன் தனக்கு செய்த நன்றிக்கடனுக்கு ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் பிரதிபலன் செய்து விட வேண்டும் என்ற நினைத்துக்கொண்டிருப்பதாக சொல்லும் ஆபாவாணன், அதற்கான சந்தர்ப்பத்தை எதிர்நோக்கியுள்ளேன் என்று சமீபத்தில் சென்னையில் நடந்த ஒரு விழாவில் மணிவண்ணன் முன்னிலையில் தெரிவித்தார்.