பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
சமீபகாலமாக தனது இசையில் உருவாகும் படங்களில் அவ்வப்போது பின்னணி பாடி வரும் யுவன்ஷங்கர்ராஜா, இசை ஆல்பங்களையும் வெளியிட்டு வருகிறார். இதனால் இசையமைப்பதைப்போலவே அவருக்கு பின்னணி பாடுவதில் ஆர்வம் இருப்பதை அறிந்த ஏ.ஆர்.ரகுமான், மரியான் படத்துக்காக யுவனை ஒரு பாடல் பாட வைத்தார். அந்த பாடல் ஹிட்டாகி விட்டதால், இப்போது வேறு சில இசையமைப்பாளர்களும் யுவனை பாட அழைக்கத் தொடங்கியுள்ளனர்.
இந்தநிலையில், நீதானே என் பொன் வசந்தம் படத்தையடுத்து தான் இசையமைக்கும் மேகா படத்தில், மகன் யுவனை ஒரு பாடல் பாட வைத்திருக்கிறார் இசைஞானி இளையராஜா. செல்லம் கொஞ்சும் பூவே கொஞ்சம் வாடா... என்று தொடங்கும் அந்த மெலோடியை பின்னணி பாடகி ரம்யாவுடன் இணைந்து பாடியுள்ளார் யுவன். அவரது குரலில் அப்பாடல் யூத் விரும்பும் வகையில் வந்திருப்பதால், இளையராஜாவும், அப்படக்குழுவும் மகிழ்ச்சியில் உள்ளனர்.