தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கோடம்பாக்கம் முழுக்க கடந்தமாதம் பற்றி எரிந்த ஒரு செய்தி நடிகை அஞ்சலி ஒருவாரம் மாயமானது தான். தெலுங்கு பட ஷூட்டிங்கிற்கு ஐதராபாத் சென்றவர் அங்கிருந்து மாயமானார். ஐதராபாத்தில் இருந்தபடியே நடிகை அஞ்சலி, தனது சித்தி பாரதிதேவி மற்றும் டைரக்டர் களஞ்சியம் ஆகியோர் தன்னை கொடுமைப்படுத்துவதாகவும், தனது சொத்தை அபகரித்துவிட்டதாகவும் புகார் கூறினார். இதற்கிடையே அஞ்சலியை காணவில்லை என்றும், அவரை யாரோ கடத்தி வைத்திருப்பதாகவும் அஞ்சலியின் சித்தி பாரதி தேவி, சென்னை கமிஷனரிடம் புகார் செய்தார். மேலும் கோர்ட்டில் கேபியஸ் கார்பஸ் மனுவும் தாக்கல் செய்தார் பாரதி தேவி. அதேப்போல் அஞ்சலி மீது களஞ்சியமும் அவதூறு புகார் அளித்தார். அஞ்சலியின் சகோதரரும் ஐதாராபாத்தில் உள்ள ஒரு போலீஸ் நிலையத்தில் அஞ்சலி மாயமானது குறித்து புகார் கொடுத்தார். இதற்கிடையே ஒருவார இடைவெளிக்கு பிறகு மீண்டும் வந்த அஞ்சலி, தன்னை யாரும் கடத்தவில்லை என்று ஐதராபாத்தில் போலீஸ் முன்பு நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடிக்கவும் தொடங்கினார்.
இந்நிலையில் தனது சித்தி பாரதி தேவியுடன் ஏற்பட்ட பகையை அஞ்சலி மறந்துவிட்டு, அவருடன் மீண்டும் சேர்ந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பாரதி தேவி, அஞ்சலியை, ஐதராபாத்தில் நேரில் சந்தித்து பேசியதாகவும், அவரது சொத்துக்களை மீண்டும் திருப்பி கொடுத்துவிடுவதாக பாரதி தேவி கூறியதாகவும், இதனால் அஞ்சலி மீண்டும் தனது சித்தியுடன் சேர்ந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் சமீபத்தில் தெலுங்கு பட விழா ஒன்றுக்கு நடிகை அஞ்சலி, தனது சித்தி பாரதி தேவியையும் உடன் அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.