ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கும்கி பட நாயகனான விக்ரம் பிரபு அடுத்து இவன் வேற மாதிரி, சிகரம்தொடு என்ற இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இப்படங்கள் கிட்டத்தட்ட முடிவடையும் தருவாயில் இருப்பதால், அவரது அடுத்த படமான அரிமா நம்பி படப்பிடிப்பை தொடங்கி விட்டார்கள். முதல் படத்தில் அமைதியான வேடத்தில் நடித்த விக்ரம் பிரபு, அடுத்து நடித்த இரண்டு படங்களிலுமே ஆக்ஷன் வேடத்தில் நடித்திருப்பது போல் இப்போது நடிக்கும் நான்காவது படத்திலும் அவருக்கு அதிரடியான ஆக்ஷன் கதாபாத்திரம்தானாம்.
மேலும், இந்த அரிமா நம்பி படத்திற்கு பல கதாநாயகிகள் தேர்வாகினர். அதில் சிலர் மொழிப் பிரச்னையினால் மாற்றப்பட்டனர். அதன்பிறகு விக்ரம் பிரபுவுக்கேற்ற உயரம் இல்லாமல் சிலர் தவிர்க்கப்பட்டனர். இப்படியாக சில மாதங்களாக நடந்து வந்த தீராத கதாநாயகி பிரச்னைக்கு எதிர்நீச்சல் ப்ரியாஆனந்த் வந்து தீர்வாகினார். விக்ரம் பிரபு படம் என்றதும், ஒரு தெலுங்குபடத்தைகூட தவித்து விட்டு இப்படத்தில் கமிட்டானாராம் ப்ரியாஆனந்த்.
அந்த அளவுக்கு அவர் ஒன்றும் பெரிய ஹீரோ இல்லையே? என்று அவரைக்கேட்டால், இல்லைதான். ஆனால், எனது பாட்டி சிவாஜியின் தீவிரமான ரசிகை. அவர் நடித்த படம் என்றால் சாப்பாட்டைகூட மறந்து மெய்மறந்து ரசிப்பார். அதனால், அவரது பேரன் விக்ரம்பிரபுவுடன் நடிக்கும் படவாய்ப்பு என்னைத்தேடி வந்துள்ளது என்று நான் சொன்னதும், உடனே ஓ.கே சொல்லிவிடு என்று என்னை அவசரப்படுத்தியது என் பாட்டிதான் என்று சொல்லும் ப்ரியாஆனந்த், சிவாஜியின் பேரன், பிரபுவின் மகன் என்ற விக்ரம் பிரபுவுடன் நடிப்பது எனக்கும் பெருமையாக உள்ளது என்கிறார்.