வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா |
இந்திஷ் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் படத்துக்கு தேடி பிடி அடி 3டி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதில் புதுமுகங்கள் மகி, கவின், அர்ஜுன், யாஷிகா, சங்கவி ஆகியோர் கதாநாயகன்–கதாநாயகிகளாக நடித்துள்ளனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் ஏகன். படத்தை பற்றி டைரக்டர் ஏகன் கூறுகையில், கோவையில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை மைய கருவாக கொண்ட படம், இது. மகி, கெவின், அர்ஜுன், யாஷிகா, சங்கவி ஆகிய 5 பேரும் டேட்டிங்குக்காக அடர்ந்த காட்டு பகுதிக்கு செல்கிறார்கள். அங்கு அவர்கள் சந்திக்கும் திகில் சம்பவங்கள் தான் கதை. சரண் பிரகாஷ், கார்த்திக் ஹர்ஷா இருவரும் இசையமைக்க, பொன் சங்கர் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். படப்பிடிப்பு சத்யமங்கலம், பொள்ளாச்சி, மற்றும் கேரள எல்லையில் நடைபெற்று முடிவடைந்துள்ளது.