ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
உதயம், சத்யா, ரங்கீலா, கம்பெனி, சர்க்கார், ரத்த சரித்திரா உள்ளிட்ட பரபரப்பு படங்களை தெலுங்கிலும், இந்தியிலும் இயக்கியவர் ராம்கோபால் வர்மா. இந்தியில் ஏராளமான வெற்றி படங்களை கொடுத்த ராம்கோபால் வர்மா நமக்கு அளித்த சிறப்பு பேட்டி இதோ...
* சினிமா மீது எப்படி ஆர்வம் வந்தது?
பள்ளியில் படிக்கும் போதே, எனக்கு சினிமா மீது தீராத காதல் உண்டு. நல்ல கதைகள் எழுத வேண்டும் என்ற ஆர்வமும், அப்போதே வந்து விட்டது. இப்படித்தான் எனக்கு சினிமா மீது காதல் தொடங்கியது.
* தமிழ் ரசிகர்கள் குறித்து?
தமிழ் ரசிகர்கள், வித்தியாசமான முயற்சிகளுக்கு நல்ல ஆதரவு கொடுக்கின்றனர். தமிழில், படம் இயக்க, பயந்தேன். இப்போது தைரியம் வந்து விட்டது. அதனால் தான், "நான்தாண்டா படத்தை எடுத்துள்ளேன். தமிழ் ரசிகர்களுக்கு, நிச்சயம் இந்த படம் பிடிக்கும் என, நம்புகிறேன்.
* இப்போது வரும் தமிழ்படங்களை பார்ப்பது உண்டா?
தமிழில், இப்போது பல வித்தியாசமான கதைகள் எடுக்கின்றனர். புதியவர்கள் அதிகமாக வருகின்றனர். அவர்கள் கதை சொல்லும் விதம், எனக்கு பிடித்துள்ளது. சமீபத்தில் நான் பார்த்த, "ஆரண்ய காண்டம், சுப்ரமணியபுரம், பீட்சா போன்ற படங்கள் ரொம்ப வித்தியாசமான முயற்சி என்று கூறலாம். இந்த மாதிரி, புதிய களத்தை கையில் எடுக்கும் இயக்குனர்களையும், சிறந்த படங்களையும் நிச்சயம் பாராட்ட ஆசைப்படுகிறேன்.
* உண்மை சம்பவத்தை படமாக்குவது சவாலான விஷயமாயிற்றே?
என்னுடைய பல படங்கள், உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டவை தான். ரவுடிகள், குற்றவாளிகள், ஊர் தலைவன், இப்படி ஊருக்கு ஊர் நடந்த உண்மை சம்பவங்களை, அப்படியே பதிவு செய்து, பல படங்களில் கொடுத்திருக்கேன். சமீபத்தில் கூட, மும்பை தாக்குதல் சம்பவத்தை மையமாக வைத்து, இந்தியில் ஒரு படம் எடுத்தேன். இதில், எந்த செயற்கை தனமும் இல்லை. உண்மை சம்பவங்களை படமாக்குவது சவாலான விஷயமாக இருந்தாலும், அந்த சவால், எனக்கு ரொம்பவும் பிடிக்கும்.
* தமிழில் படம் இயக்குவதில் ஆர்வம் காட்டுவது இல்லையே?
என் முதல் படமான, "உதயம் தெலுங்கில் வெளிவந்த போதே, தமிழில் ஒரு படம் பண்ண ஆசைப்பட்டேன். ஆனால், மொழி தெரியாமல், புரியாமல், படம் பண்ண விருப்பம் இல்லை. எனக்கு அதிகமான தமிழ் நண்பர்கள் உண்டு. இதனால், இப்போது தமிழ் பேசுவதை புரிந்து கொள்ள முடிகிறது. திரும்ப பேசுவதற்கு தான், சிரமமாக உள்ளது. தற்போது, தமிழுக்கென்று, ஒரு கதை தயார் செய்து, "நான்தான்டா என்ற பெயரில் படம் எடுத்துள்ளேன். சென்னை, திருச்சி, மதுரை என்று, அத்தனை ஊர் மக்களின் வாழ்க்கையையும் பதிவு செய்திருக்கிறேன்.