இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
பெப்சியில் நடந்த அடிதடி மோதலை தொடர்ந்து பெப்சி சார்பில் நடத்தப்பட்ட ஸ்டிரைக்கால் கார்த்தி, விஷால் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட படப்பிடிப்புகள் பாதிக்கப்பட்டன. டிரைவர்ஸ் யூனியனின் உள் விவகாரங்களில் பெப்சி தலையிடுவதாகவும், அவர்கள் நடத்த இருந்த டிரைவர்ஸ் யூனியன் தேர்தலில் பெப்சியின் பொறுப்பில் உள்ளவர்கள் மூக்கை நுழைப்பதாகவும் குற்றச்சாட்டுகள் இருந்து வந்தன. இந்நிலையில் நேற்று பெப்சியுடன் பேச்சுவார்த்தைக்கு வந்த டிரைவர்ஸ் யூனியன் செயலாளர் செந்தில், பெப்சியின் பொருளாளர் சண்முகத்துடனும், பெப்சியின் துணை செயலாளர் தனபால் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். அது இறுதியில் கைகலப்பில் முடிந்திருக்கிறது. இதுகுறித்து சண்முகம் சார்பில் போலீசில் புகார் செய்யப்பட்டு உள்ளது.
இந்நிலையில் ‘பெப்சி’ தொழிலாளர்கள் இன்று(மே 28ம் தேதி) ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். கோடம்பாக்கம் டைரக்டர்கள் காலனியில் திரண்டு, நிர்வாகிகளை தாக்கியவர்கள் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷம் போட்டபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். பெப்சி அமைப்பினரின் போராட்டாத்தால், கார்த்தி நடித்து வரும் ‘பிரியாணி’, விஷால் நடித்து வரும் ‘பட்டத்துயானை’ உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட படப்பிடிப்புகள் பாதிக்கப்பட்டன.