தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பெப்சியில் நடந்த அடிதடி மோதலை தொடர்ந்து பெப்சி சார்பில் நடத்தப்பட்ட ஸ்டிரைக்கால் கார்த்தி, விஷால் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட படப்பிடிப்புகள் பாதிக்கப்பட்டன. டிரைவர்ஸ் யூனியனின் உள் விவகாரங்களில் பெப்சி தலையிடுவதாகவும், அவர்கள் நடத்த இருந்த டிரைவர்ஸ் யூனியன் தேர்தலில் பெப்சியின் பொறுப்பில் உள்ளவர்கள் மூக்கை நுழைப்பதாகவும் குற்றச்சாட்டுகள் இருந்து வந்தன. இந்நிலையில் நேற்று பெப்சியுடன் பேச்சுவார்த்தைக்கு வந்த டிரைவர்ஸ் யூனியன் செயலாளர் செந்தில், பெப்சியின் பொருளாளர் சண்முகத்துடனும், பெப்சியின் துணை செயலாளர் தனபால் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். அது இறுதியில் கைகலப்பில் முடிந்திருக்கிறது. இதுகுறித்து சண்முகம் சார்பில் போலீசில் புகார் செய்யப்பட்டு உள்ளது.
இந்நிலையில் ‘பெப்சி’ தொழிலாளர்கள் இன்று(மே 28ம் தேதி) ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். கோடம்பாக்கம் டைரக்டர்கள் காலனியில் திரண்டு, நிர்வாகிகளை தாக்கியவர்கள் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷம் போட்டபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். பெப்சி அமைப்பினரின் போராட்டாத்தால், கார்த்தி நடித்து வரும் ‘பிரியாணி’, விஷால் நடித்து வரும் ‘பட்டத்துயானை’ உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட படப்பிடிப்புகள் பாதிக்கப்பட்டன.