டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தமிழில், எங்கேயும் எப்போதும் படத்தில் நடித்தவர் தெலுங்கு நடிகரான சர்வானந்த். அந்த படத்திற்கு பிறகு தமிழில் இருந்து 50க்கும் மேற்பட்ட கதைகள் சென்றதும் எந்த கதையிலும் நடிக்க விருப்பம் தெரிவிக்காத அவர், தற்போது ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை என்ற படத்தில் மட்டுமே நடிக்க சம்மதித்து நடித்து முடித்து விட்டார். இந்த படம் தமிழில் தனக்கொரு திருப்புமுனையாக அமையும் என்றும் காத்திருக்கிறார் சர்வானந்த்.
இந்தநிலையில், தெலுங்கில் ராம்கோபால்வர்மா இயக்கத்தில் அவர் நடித்த படம் தமிழில், நான்தான்டா என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வெளியாகிறது. இப்படத்தில் இதுவரை சாப்ட்டான வேடங்களில் நடித்து வந்த சர்வானந்த் முதன்முறையாக ஆக்ஷன் வேடத்தில் நடித்துள்ளாராம். ஏற்கனவே சூர்யா நடிப்பில் ரத்த சரித்திரம் என்ற படத்தை தமிழில் இயக்கிய ராம்கோபால்வர்மா இப்படத்தை புதிய கோணத்தில் வடிமைத்துள்ளாராம். அதனால் அந்த படம் பெற்றுத்தராத வெற்றியை இப்படம் பெற்றத்தரும் என்றும் தான் நம்புவதாக தெரிவித்துள்ளார்.