பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது |
எந்த மேடைக்கு சென்றாலும் அங்கு கூடியிருப்பவர்களைப்பார்த்து மச்சான் என்று சொல்லி முத்தங்களை பறக்க விடுவது நமீதாவின் ஸ்டைல். அதோடு, ரசிகர்களைகூட அவர் மச்சான் என்றுதான் அழைப்பார். அதனால்தான் எந்த நடிகைக்கும் இல்லாத அளவுக்கு நமீதாவுக்கு ரசிகர்கள் பெருகினர். இப்போது அவர் இளமை ஊஞ்சல் என்ற படத்தில் மட்டும்தான் நடித்து வருகிறார். இருப்பினும் நமீதாவுக்கென்று ஒரு இடம் இருந்து கொண்டுதான் இருக்கிறது.
இந்தநிலையில், இந்தியாவில் சென்னைதான் எனக்கு பிடித்த இடம். இங்குதான் எனது நட்பு வட்டாரங்கள் நிறைய உள்ளன. அதனால்தான் சென்னையிலேயே சொந்தமாக வீடுவாங்கி குடியேறி விட்டேன் என்று சொல்கிறார் நமீதா.
அவரிடம், யாரைப்பார்த்தாலும் நீங்கள் மச்சான் என்று சொல்வதன் காரணம் என்ன? என்று கேட்டபோது, படப்பிடிப்பு தளங்களில் வேலை செய்யும் நபர்கள் ஒருவரையொருவர் மச்சான் என்று அழைத்துக்கொண்டதை பலமுறை கேட்டிருக்கிறேன். அந்த வார்த்தையில் ஒரு அன்பு இருந்தது. ஒரு பாசம் இருந்தது. அதனால் அந்த வார்த்தையை நான் பயன்படுத்தத் தொடங்கினேன். அதனால்தான் என் மீது ரசிகர்கள் அன்பு காட்டத் தொட்ங்கினார்கள். எனக்கு கோயில் கட்டும் அளவுக்கு இருக்கிறார்கள் என்றால் அது என் மீது வைத்திருக்கும் அன்புதான் என்கிறார் நமீதா.