பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
கேரளத்திலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்து சினிமாவில் கொடியேற்றிய நடிகைகளில் அம்பிகா-ராதாவுக்கு தனி இடம் உண்டு. தென்னிந்திய சினிமாவில் ஒரு பெரிய ரவுண்டே வந்தார்கள். எம்.ஜி.ஆர் தவிர அனைத்து தமிழ் ஹீரோக்களுடனும் டூயட் பாடிய பெருமை இந்த சேச்சிகளுக்கு உண்டு. இவர்களில் ராதா, திருமணம் செய்து கொண்டு மும்பையில் செட்டிலானவர், இப்போது மகள்களையும் சினிமாவில் இறக்கி விட்டுள்ளார்.
ஆனால், அம்பிகா தொடர்ந்து அவ்வப்போது சில படங்களில் கேரக்டர் ஆர்ட்டிஸ்டாக நடித்து வந்தவர், இப்போது, நிழல் என்றொரு படத்தை இயக்கியுள்ளார் இந்த படத்தின் ஆடியோ விழாவில் பேசிய அவர், தனது கடந்த காலத்தை கொஞ்சம் திரும்பிப்பார்த்தார். அப்போது, நான் ஆரம்பத்தில் சென்னைக்கு வ்நதபோது ஒரு ஓட்டலில் தங்கியிருந்தேன். அதையடுத்து நுங்கம்பாக்கத்தில் ஒரு வீட்டில் குடியிருந்தேன். அந்த வீட்டுக்கு வந்தபிறகு எனது சினிமா கேரியரே மாறியது. குறுகிய காலத்தில் பெரிய நடிகையானேன். அதன்பிறகுதான் நாங்கள் குடியிருந்தது அண்ணாதுரையின் வீடு என்பது தெரியவந்தது.
இத்தனை நாளும் அண்ணாவின் வீட்டிலா குடியிருந்தோம் என்று ரொம்ப சந்தோசப்பட்டேன். அவர் வீட்டில் குடியிருந்த ராசிதான் என்னையும், என் தங்கை ராதாவையும் பெரிய நடிகையாக்கியதாக உணர்ந்தேன் என்று பெருமையாக சொல்லிக்கொண்டார் அம்பிகா.