கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
பிரபல மலையாள நடிகையான ஸ்வேதாமேனனின் நிஜ பிரசவத்தை களிமண் என்ற படத்திற்காக படமாக்கியுள்ளனர். ஆனால் இதற்கு மகிளா மோர்ச்சா என்ற பெண்கள் அமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சமூக ஆர்வலர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பெண்களின் மனிதாபிமானமும், தனிமை பண்பும் சமூகத்தில் நெடுங்காலமாக காக்கப்பட்டு வருகின்றன. ஆனால் அதை உடைத்தெறியும் வகையில் ஸ்வேதாமேனன் அத்து மீறி நடந்திருக்கிறார் என்று அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அதுமட்டுமின்றி அவரது இரண்டாவது பிரசவத்தை டிக்கெட் விநியோகித்து காட்டத்தயாராக இருக்கிறாரா? என்றும் சூடான கேள்வி எழுப்பியுள்ளனர். ஆனால் இதைக்கேட்டு கொதித்துப்போயிருக்கிறாராம் ஸ்வேதாமேனன். அதோடு, என்னைப்பார்த்து இப்படி விமர்சிப்பவர்களிடம் நான் சில கேள்விகள் கேட்க வேண்டியுள்ளது. அதை இப்படம் திரைக்கு வந்தபிறகு கட்டாயம் கேட்பேன் என்று கூறியுள்ளார்.
மேலும், என் நடிப்பு தவறாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. ஆனால் களிமண் வெளியாகும்போது நான் எதற்காக அப்படி நடித்தேன் என்பதை மக்கள் புரிந்து கொள்வார்கள் என்றும் கூறியுள்ளார் ஸ்வேதாமேனன்.