மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
பிரபல மலையாள நடிகையான ஸ்வேதாமேனனின் நிஜ பிரசவத்தை களிமண் என்ற படத்திற்காக படமாக்கியுள்ளனர். ஆனால் இதற்கு மகிளா மோர்ச்சா என்ற பெண்கள் அமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சமூக ஆர்வலர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பெண்களின் மனிதாபிமானமும், தனிமை பண்பும் சமூகத்தில் நெடுங்காலமாக காக்கப்பட்டு வருகின்றன. ஆனால் அதை உடைத்தெறியும் வகையில் ஸ்வேதாமேனன் அத்து மீறி நடந்திருக்கிறார் என்று அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அதுமட்டுமின்றி அவரது இரண்டாவது பிரசவத்தை டிக்கெட் விநியோகித்து காட்டத்தயாராக இருக்கிறாரா? என்றும் சூடான கேள்வி எழுப்பியுள்ளனர். ஆனால் இதைக்கேட்டு கொதித்துப்போயிருக்கிறாராம் ஸ்வேதாமேனன். அதோடு, என்னைப்பார்த்து இப்படி விமர்சிப்பவர்களிடம் நான் சில கேள்விகள் கேட்க வேண்டியுள்ளது. அதை இப்படம் திரைக்கு வந்தபிறகு கட்டாயம் கேட்பேன் என்று கூறியுள்ளார்.
மேலும், என் நடிப்பு தவறாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. ஆனால் களிமண் வெளியாகும்போது நான் எதற்காக அப்படி நடித்தேன் என்பதை மக்கள் புரிந்து கொள்வார்கள் என்றும் கூறியுள்ளார் ஸ்வேதாமேனன்.