ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சின்னத்திரையில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்த சிவகார்த்திகேயன் தற்போது வேகமாக வளர்ந்து வரும் ஹீரோவாகியிருக்கிறார். இவர் மெரினா, 3, மனம் கொத்திப்பறவை ஆகிய படங்களில் நடித்து வந்தபோது இந்த அளவுக்கு வளருவார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. கேடி பில்லா கில்லாடி ரங்காவில் ஒப்பந்தமானபோதுகூட நாம்தான் சிவகார்த்திகேயனை விட முன்னணி நடிகர் என்று தில்லாகத்தான களமிறங்கினார் விமல். ஆனால், படம் திரைக்கு வந்தபோது கைதட்டலை வாங்கிச்சென்றதோ சிவகார்த்திகேயன்.
இப்போது, எதிர்நீச்சல் படத்தில் இன்னும் வளர்ந்து நிற்கிறார் அவர். தியேட்டரில் அவர் பேசும் காமெடிகளை கேட்டு தியேட்டரே அதிருவதாக கேள்விப்பட்டு விமல் உள்ளிட்ட இளவட்ட நடிகர்கள் அதிர்ந்து போயிருக்கிறார்களாம். நமக்கு பிறகு வந்த ஒரு டி.வி தொகுப்பாளர் நம்மை மிஞ்சி வளர்ந்து நிற்கிறாரே என்று பேசிக்கொள்ளும் அவர்கள், இனி சிவகார்த்திகேயன் மாதிரியான வளர்ந்து வரும் ஹீரோக்களுடன் நடித்து அவர்கள் வளருவதற்கு நாமளும காரணமாகிவிடக்கூடாது என்றும் முடிவெடுத்திருக்கிறார்களாம்.