ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
பாய்ஸ் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் ஜெனிலியா. இவர் விஜய்க்கு ஜோடியாக சச்சின் படத்திலும், ஜெயம் ரவிக்கு ஜோடியாக சந்தோஷ் சுப்பிரமணியம் படத்திலும் நடித்தார். பிறகு இந்தி, தெலுங்கு படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார். ஜெனிலியாவும், மத்திய அமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக் மகன் ரிதீஷ்தேஷ்முக்கும் காதலிக்கிறார்கள் என செய்தி வெளியானது. விலாஸ்ராவ் தேஷ்முக் மகாராஷ்டிர மாநிலத்தின் முன்னாள் முதல்வராவார். ஜெனிலியாவும், ரிதீஷும் சேர்ந்து சினிமா விழாக்களில் பங்கேற்றனர். நட்சத்திர ஓட்டல் விருந்துகளிலும் கலந்து கொண்டனர். இந்த காதல் பற்றி ஜெனிலியாவிடம் கேட்டபோது, மறுத்தார். இருவரும் நண்பர்கள் என்றார். அதிகாரத்தை பயன்படுத்தி விலாஸ்ராவ் தேஷ்முக் மிரட்டியதால் ஜெனிலியா பயந்து மறுத்ததாக தகவல்கள் வெளியாயின. இந்த நிலையில் ரிதீஷ் தேஷ்முக்கும் காதல் விவகாரம் பற்றி விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது: நானும், ஜெனிலியாவும் காதலிப்பதாக தொடர்ந்து செய்திகள் வருகின்றன. நாங்கள் இருவரும் நண்பர்களாகத் தான் பழகுகிறோம். எங்களுக்குள் காதல் எதுவும் இல்லை. சினிமாவில் பிரபலமாக இருப்பவர்கள் மீது இது போன்ற கிசுகிசுக்கள் வருவது சகஜம்தான். அதோடுதான் வாழ வேண்டி இருக்கிறது. யார் மீதும் இதுவரை எனக்கு காதல் ஏற்படவில்லை. காதல் என்பது ஒருவர் மீது திடீரென்று ஏற்படுவது. அப்படிப்பட்ட பெண்ணை இன்னும் நான் சந்திக்கவில்லை என்றார்.