Advertisement

சிறப்புச்செய்திகள்

அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கேரளாவிலும் "பவர் ஸ்டார் "கைவரிசை! ஒரே நாளில் மூன்று புகார்கள்

01 மே, 2013 - 11:31 IST
எழுத்தின் அளவு:

கேரளாவை, சேர்ந்த நகை கடை பங்குதாரரிடம், 21.50 லட்சம் ரூபாய் மோசடி, ஓசூரை சேர்ந்தவரிடம், 10 லட்சம் ரூபாய் மோசடி என, நடிகர், "பவர் ஸ்டார் சீனிவாசன் மீது, ஒரே நாளில், மூன்று புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன. கேரள மாநிலம், கண்ணூரை சேர்ந்த தேவதாசன், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்தார்.

புகார் மனு விவரம்:  கண்ணூரில் உள்ள நகைகடையில் பங்குதாரராக உள்ளேன். தொழிலை விரிவு படுத்த திட்டமிட்டிருந்தேன். 2010ல், நடிகர், "பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு சொந்தமான, "பாபா டிரேடிங் கம்பெனியின், ஏஜென்ட் என்று, சென்னையை சேர்ந்த கிறிஸ்டோபர் என்பவர் அறிமுகமானார். கடனுதவி பெற, ஏற்பாடு செய்வதாகவும் கூறினார். மறு வாரம், சென்னை அண்ணாநகரில், உள்ள, "பாபா டிரேடிங் கம்பெனியில், சீனிவாசனை சந்தித்து, "6 கோடி ரூபாய் கடன் வேண்டும் என்றேன். இதையடுத்து என் சொத்து விவரங்களை, சீனிவாசன் கேட்டறிந்தார். பின், 5.35 ‌கோடி ரூபாய், கடன் பெற ஏற்பாடு செய்வதாகவும், அதற்கு கமிஷனாக, 21.50 லட்சம் ரூபாய்கமிஷனாக தர வேண்டும் எனவும் கூறினார்.

கடந்த, 2010 ஆகஸ்ட், 13ம் தேதி, 21 லட்சம் ரூபாய்க்கு வரைவோலையும், 50 ஆயிரம் ரூபாய் ரொக்கமாகவும் கொடுத்தேன். இதை பெற்றுக் கொண்ட அவர், "பத்து நாட்களில் பணம் கிடைத்து விடும் என, உறுதி அளித்தார். இதையடுத்து, கடன் தொகை பெற, பல முறை அவரை சந்தித்தேன். ஆனால், அவர் பணம் பெற்றுத் தரவில்லை. கடந்த, 2010, செப்டம்பர் மாதம், துபாயில் உள்ள என் நகை கடையை பார்வையிட வேண்டும் என்றார். சீனிவாசன் மற்றும் அவரது சகாக்கள், இரண்டு பேரை, 1.60 லட்சம் ரூபாய்செலவு செய்து, அழைத்து சென்றேன். குவைத்தில் இருந்து திரும்பிய சில நாட்களில், பணத்துக்கு ஏற்பாடு செய்வதாக, மீண்டும் அவர் உறுதி அளித்தார்.

பின், 2012, மே மாதம், அண்ணா நகரில் உள்ள அவரது அலுவலகத்துக்கு, சென்றேன். அவர் யெஸ் பேங்க், நுங்கம்பாக்கம் கிளையில், மாற்றத்தக்க வகையில், 2 கோடி ரூபாய்க்கு காசோலை கொடுத்தார். அதை வங்கியில் கொடுத்து பணம் பெற முயன்ற போது, கையெழுத்து மாறி இருப்பதாக கூறி, திருப்பி கொடுத்து விட்டனர். அப்போது தான், "பவர் ஸ்டார் சீனிவாசன் என்னை ஏமாற்றுவதை உணர்ந்தேன். கடந்த ஜனவரி, முதல் வாரம், சென்னை அண்ணாநகரில், சீனிவாசனை சந்தித்து, "எனக்கு கடன் வேண்டாம். நான் கொடுத்த, 21. 50 லட்சம் ரூபாயை திருப்பி கொடுத்து விடுங்கள் என்றேன். ஜனவரி, 12ம் தேதி, அண்ணா நகரில் உள்ள, கோடக் மகிந்திரா வங்கி கிளையில், மாற்றத்தக்க வகையில், 20 லட்சம் ரூபாய்க்கான காசோலை கொடுத்தார். அதை, வங்கியில் கொடுத்தபோது, பணம் இல்லாமல் திரும்பி வந்து விட்டது.எனவே, கடன் வாங்கி தருவதாக கூறி, மோசடி செய்த "பவர் ஸ்டார் சீனிவாசன், அவரது ஏஜென்ட் கிறிஸ்டோபர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுத்து, பணத்தை மீட்டுத் தர வேண்டும்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

இதேபோல், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரை சேர்ந்த சென்ன கிருஷ்ணன், தனக்கு, 1 கோடி ரூபாய் கடன், வாங்கி தருவதாக கூறி, கமிஷனாக, 10 லட்சம் ரூபாய்வாங்கி ஏமாற்றி விட்டார் என, புகார் செய்துள்ளார். அண்ணாநகரை சேர்ந்த கல்யாணசுந்தரம் என்பவர், தனக்கு வாடகை பாக்கியாக, 1.80 லட்சம் ரூபாய்தர வேண்டும் என, புகார் செய்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

kumaresan.m - hochimin ,வியட்னாம்
01 மே, 2013 - 18:51 Report Abuse
kumaresan.m " போலியாக ஒரு பட்ட பெயரை வைத்து கொண்டு மக்களை ஏமாத்த வேண்டியது ....... குண்டர் சட்டத்தில் உள்ள வைத்து லாடம் கட்டுங்கள் புத்தி வரட்டும் ...இந்த 420 ஸ்டாருக்கு "
Rate this:
abdulsamat - Pudukkottai,கத்தார்
01 மே, 2013 - 14:12 Report Abuse
abdulsamat அய்யோ இவன் யாருப்பா நல்ல போய்கிட்ட்ருகையிலே சும்மா எப்ப பாரு ஒரே காமடிதான் சரி போனபோகுது நீ யார் ???உனக்கு பின்னாலே யாரு இந்த வேலை பர்கரங்க சொல்லு உண்மையே ......
Rate this:
sekar - Chennai  ( Posted via: Dinamalar Android App )
01 மே, 2013 - 12:12 Report Abuse
sekar super news
Rate this:
Muthurasu - Singapore ,சிங்கப்பூர்
01 மே, 2013 - 12:08 Report Abuse
Muthurasu இந்த சீனிவாசனை குண்டர் சட்டத்துல தலுன்கப்பா. இவன் தொல்ல தாங்கலட.....
Rate this:
srinivasan - thirunelveli,இந்தியா
01 மே, 2013 - 12:08 Report Abuse
srinivasan no comments . but couldn 't keep my frustration about this criminal பவர் ஸ்டார். இவரை போல எத்தனை பேரு ஏமாற்றி சிறையில் அடைபட்டு உள்ளார்கள்.. அனால் பவர் ஸ்டார் போலீஸ் இக் லஞ்சம் கொடுத்து வெளியில் வந்திடுவாரு.
Rate this:
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
01 மே, 2013 - 17:26Report Abuse
சு கனகராஜ் எதற்காக இந்த சித்து விளையாட்டு விளையாடுகிறார் பவர்...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in