பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
ஒரு வார காலம் மாயமான அஞ்சலி, மீண்டும் வெளி உலகத்துக்கு வந்து, "போல் பச்சன், பல்பு போன்ற தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். ஆனால், இந்த படங்களில், அவர் திரும்பவும் நடிக்க வந்தபோது, அவரது முகத்தில் பழைய நடிப்பு வருமா என்ற சந்தேகம், அப்பட இயக்குனர்களிடம் இருந்ததாம்.
ஆனால், முதல்நாள் படப்பிடிப்பு தளத்திற்குள் வந்தபோதே, நடந்து முடிந்த சர்ச்சைகள் எல்லாவற்றையும் அடியோடு மறந்துவிட்டது போல், உற்சாகமாக வந்தாராம் அஞ்சலி.மேலும், முன்பை விட, ஒவ்வொரு காட்சியையும் வேகவேகமாக முடித்துக் கொடுத்தாராம். அதைப் பார்த்த இயக்குனர்களுக்கு ஆச்சர்யம் ஏற்பட்டதாம். "நடந்த விஷயம், என் சொந்த கதை. அதனால், அதை ஸ்பாட்டுக்கு வரும்போது, வீட்டில் விட்டு விட்டேன். இங்கே இருக்கிற நேரம் முழுக்க நான், உங்கள் கதைக்கான கதாபாத்திரம். அதனால், அதுவாகவே மாறிவிட்டேன் என்றாராம்.