துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் |
அஞ்சல்துறை என்ற பெயரில் புதுமுகங்கள் நடிக்கும் ஒரு திகில் படம் தயாராகி வருகிறது. புதுமுகங்கள் மோகன் சி, நாராயணன் இருவரும் கதாநாயகர்களாக நடிக்க, இவர்களுக்கு ஜோடிகளாக சவுபர்னிகா, குஷ்பு முகர்ஜி ஆகிய இருவரும் நடிக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், எடிட்டிங், ஒளிப்பதிவு, டைரக்ஷன் பொறுப்புகளை ஏ.ஆர்.ரபி ஏற்றுள்ளார்.
படத்தை பற்றி ரபி கூறுகையில், கல்லூரி விடுதியில் தங்கி படிக்கும் இரண்டு நண்பர்கள் காதல் வசப்படுகிறார்கள். அந்த அறையில் ஒரு அமானுஷ்யமான சக்தி இருந்து கொண்டு இவர்களின் காதலுக்கு தொல்லை கொடுக்கிறது. அதை மீறி நண்பர்கள் இரண்டு பேரும் காதலில் எப்படி ஜெயிக்கிறார்கள்? என்பதே கதை. செந்தில், நெல்லை சிவா, பெஞ்சமின், கிங்காங், போண்டாமணி ஆகிய நகைச்சுவை நடிகர்களுடன் வடிவுக்கரசியும் நடிக்கிறார். பருத்திப்பள்ளி பி.சின்னுச்சாமி தயாரிக்கிறார். பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை மற்றும் திருவனந்தபுரத்தில் படம் வளர்ந்து வருகிறது, என்றார்.