பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்தின் மூலம் ரீ-என்ட்ரி ஆகியுள்ள ஸ்ரீதேவி, சினிமாவில் தொடர்ந்து நடிக்கத் தயாராகி விட்டார். அதனால் சினிமா விழாக்களில் அதிகமாக கலந்து கொண்டு வருகிறார். இந்தநிலையில், தனக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்ததை கொண்டாடும் வகையில், நேற்று முன்தினம் சென்னையிலுள்ள தாஜ்கோரமண்டல் ஓட்டலில் ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார் ஸ்ரீதேவி.
இந்த விருந்து நிகழ்ச்சியில் ஸ்ரீதேவியின் தமிழ்த்திரையுலக நண்பர்கள் கலந்து கொண்டனர். முக்கியமாக ரஜினியும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் சிறப்பு சேர்த்திருக்கிறார். உடல்நலம் பாதிக்கப்பட்ட பிறகு விருந்து நிகழ்ச்சிகளில் அதிகமாக கலந்து கொள்ளாத ரஜினி, ஸ்ரீதேவியின் அன்புக்கு கட்டுப்பட்டு இந்த விருந்தில் கலந்து கொண்டாராம.
அப்போது ஸ்ரீதேவியிடம் நீண்டநேரமாக பேசிக்கொண்டிருந்த ரஜினி, அவருடன் தான் 25 படங்களில் ஜோடி சேர்ந்த அந்த காலகட்ட அனுபவங்களையும் நினைவு கூர்ந்தாராம். அதை விருந்தில் கலந்து கொண்டவர்கள் ஆர்வமாக கேட்டு கைதட்டி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்களாம்.