டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பில்லா-2வுக்கு பிறகு விஷ்ணுவர்தன் இயக்கும் படத்தில் நடித்துள்ளார் அஜீத். அப்படத்தில் ஆர்யா, நயன்தாரா, டாப்ஸி ஆகியோரும் நடித்துள்ளனர். தற்போது அதன் அனைத்துக்கட்ட படப்பிடிப்பும் முடிவடைந்து இறுதிகட்ட பணிகள் நடந்து வருகிறது. அதனால் அதற்கடுத்து சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் நடிப்பதற்காக தற்போது ஐதராபாத்தில் முகாமிட்டுள்ளார் அஜீத்.
இந்த நிலையில், விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத் நடித்துள்ள படத்துக்கு வலை என்று ஏற்கனவே செய்தி பரவியது. அதனால் அஜீத்தின் ரசிகர்கள் வலை என்ற பெயரில் பல டிசைன்களை பண்ணி இணையதளங்களில் உலவ விட்டிருக்கிறார்கள். ஆனால், இதுவரை அந்த தலைப்புக்கு மறுப்பு சொல்லாத விஷ்ணுவர்தன் இப்போது வலை என்று பெயர் வைக்கவே இல்லை என்று மறுத்துள்ளார்.
அப்படியென்றால் என்ன தலைப்பு வைத்திருக்கிறீர்கள்? என்று கேட்டால், இரண்டு தலைப்புகளை யோசித்து வைத்திருக்கிறேன். அதில் ஒன்றை தேர்வு செய்தேன் அஜீத்தின் பிறந்த நாளான மே 1-ந்தேதி வெளியிடுவேன் என்று தெரிவித்துள்ளார்.