தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பில்லா-2வுக்கு பிறகு விஷ்ணுவர்தன் இயக்கும் படத்தில் நடித்துள்ளார் அஜீத். அப்படத்தில் ஆர்யா, நயன்தாரா, டாப்ஸி ஆகியோரும் நடித்துள்ளனர். தற்போது அதன் அனைத்துக்கட்ட படப்பிடிப்பும் முடிவடைந்து இறுதிகட்ட பணிகள் நடந்து வருகிறது. அதனால் அதற்கடுத்து சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் நடிப்பதற்காக தற்போது ஐதராபாத்தில் முகாமிட்டுள்ளார் அஜீத்.
இந்த நிலையில், விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத் நடித்துள்ள படத்துக்கு வலை என்று ஏற்கனவே செய்தி பரவியது. அதனால் அஜீத்தின் ரசிகர்கள் வலை என்ற பெயரில் பல டிசைன்களை பண்ணி இணையதளங்களில் உலவ விட்டிருக்கிறார்கள். ஆனால், இதுவரை அந்த தலைப்புக்கு மறுப்பு சொல்லாத விஷ்ணுவர்தன் இப்போது வலை என்று பெயர் வைக்கவே இல்லை என்று மறுத்துள்ளார்.
அப்படியென்றால் என்ன தலைப்பு வைத்திருக்கிறீர்கள்? என்று கேட்டால், இரண்டு தலைப்புகளை யோசித்து வைத்திருக்கிறேன். அதில் ஒன்றை தேர்வு செய்தேன் அஜீத்தின் பிறந்த நாளான மே 1-ந்தேதி வெளியிடுவேன் என்று தெரிவித்துள்ளார்.