ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பில்லா-2வுக்கு பிறகு விஷ்ணுவர்தன் இயக்கும் படத்தில் நடித்துள்ளார் அஜீத். அப்படத்தில் ஆர்யா, நயன்தாரா, டாப்ஸி ஆகியோரும் நடித்துள்ளனர். தற்போது அதன் அனைத்துக்கட்ட படப்பிடிப்பும் முடிவடைந்து இறுதிகட்ட பணிகள் நடந்து வருகிறது. அதனால் அதற்கடுத்து சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் நடிப்பதற்காக தற்போது ஐதராபாத்தில் முகாமிட்டுள்ளார் அஜீத்.
இந்த நிலையில், விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத் நடித்துள்ள படத்துக்கு வலை என்று ஏற்கனவே செய்தி பரவியது. அதனால் அஜீத்தின் ரசிகர்கள் வலை என்ற பெயரில் பல டிசைன்களை பண்ணி இணையதளங்களில் உலவ விட்டிருக்கிறார்கள். ஆனால், இதுவரை அந்த தலைப்புக்கு மறுப்பு சொல்லாத விஷ்ணுவர்தன் இப்போது வலை என்று பெயர் வைக்கவே இல்லை என்று மறுத்துள்ளார்.
அப்படியென்றால் என்ன தலைப்பு வைத்திருக்கிறீர்கள்? என்று கேட்டால், இரண்டு தலைப்புகளை யோசித்து வைத்திருக்கிறேன். அதில் ஒன்றை தேர்வு செய்தேன் அஜீத்தின் பிறந்த நாளான மே 1-ந்தேதி வெளியிடுவேன் என்று தெரிவித்துள்ளார்.