‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
ஏகப்பட்ட கடன் தொல்லையால் பிரபல சினிமா எடிட்டர் ஜெயச்சந்திரன் விஷம் அருந்தி தற்கொலை முயற்சி மேற்கொண்டுள்ளார். சினிமாவில் 100-க்கும் மேற்பட்ட படங்களுக்கு எடிட்டராக பணியாற்றியவர் ஜெயச்சந்திரன். விஜயகாந்தின் அநேக படங்களுக்கு எடிட்டராக பணியாற்றியுள்ளார். அதுமட்டுமின்றி தமிழக அரசிடம் 5 முறை சிறந்த படத் தொகுப்புக்கான விருதினைப் பெற்றவர் ஜெயச்சந்திரன். மேலும் சில படங்களை தயாரிக்கவும் செய்தார். ஆனால் அந்தபடங்கள் அவருக்கு நஷ்டத்தை கொடுத்தது. இதனால் இவருக்கு கடன் தொல்லை அதிகமானது. வாங்கிய கடனை கட்டமுடியாமல், கடன்காரர்களால் நெருக்கடிக்கு தள்ளப்பட்டார். இன்றைய தேதியில் இவரது சுமார் ரூ.4 கோடி என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் கடனை திருப்பி செலுத்த முடியாததால் மனம் உடைந்த ஜெயச்சந்திரன், வீட்டில் விஷம் அருந்தி உள்ளார். இதனை அறிந்த அவரது மனைவி உடனடியாக சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ஜெயச்சந்திரனை சேர்த்துள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகக் கூறப்படுகிறது.