ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நடிகை ரேவதியும், டைரக்டர் சுரேஷ் மேனனும் முறைப்படி விவாகரத்து பெற்றனர். "மண் வாசனை படத்தின் மூலம், தமிழ் திரை உலகில், அறிமுகமானவர், நடிகை ரேவதி. அதன்பின், தொடர்ச்சியாக பல படங்களில் நடித்தார். ஒருமுறை, தேர்தலிலும் போட்டியிட்டார். சமூகப் பிரச்னைகளில் அக்கறை காட்டி வருபவர். இவருக்கும், கேமராமேனும், டைரக்டருமான சுரேஷ் மேனன் என்பவருக்கும், 1986ல், திருமணம் நடந்தது. இருவரும் சேர்ந்து, புதியமுகம் எனும் ஒரு படத்திலும் நடித்துள்ளனர்.
இந்நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட பரஸ்பர விவாகரத்து கோரி, சென்னை ஐகோர்ட் வளாகத்தில் உள்ள, குடும்ப நல கோர்ட்டில், கடந்த ஆண்டு, அக்டோபரில், இருவரும் மனுத் தாக்கல் செய்தனர். ஆறு மாதங்களுக்குப் பின், இவ்வழக்கு, நீதிபதி, ராஜா சொக்கலிங்கம் முன், ஏப்-6ம் தேதி விசாரணைக்கு வந்தது. நடிகை ரேவதியும், சுரேஷ் மேனனும் ஆஜராயினர். அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி வழக்கின் மீதான தீர்ப்பை, இன்று ஏப்ரல் 22ம் தேதிக்கு, நீதிபதி தள்ளி வைத்துள்ளார். அதன்படி இன்று இருவருக்கும் பரபஸ்பர விவாகரத்து வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.