டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
நடிகை ரேவதியும், டைரக்டர் சுரேஷ் மேனனும் முறைப்படி விவாகரத்து பெற்றனர். "மண் வாசனை படத்தின் மூலம், தமிழ் திரை உலகில், அறிமுகமானவர், நடிகை ரேவதி. அதன்பின், தொடர்ச்சியாக பல படங்களில் நடித்தார். ஒருமுறை, தேர்தலிலும் போட்டியிட்டார். சமூகப் பிரச்னைகளில் அக்கறை காட்டி வருபவர். இவருக்கும், கேமராமேனும், டைரக்டருமான சுரேஷ் மேனன் என்பவருக்கும், 1986ல், திருமணம் நடந்தது. இருவரும் சேர்ந்து, புதியமுகம் எனும் ஒரு படத்திலும் நடித்துள்ளனர்.
இந்நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட பரஸ்பர விவாகரத்து கோரி, சென்னை ஐகோர்ட் வளாகத்தில் உள்ள, குடும்ப நல கோர்ட்டில், கடந்த ஆண்டு, அக்டோபரில், இருவரும் மனுத் தாக்கல் செய்தனர். ஆறு மாதங்களுக்குப் பின், இவ்வழக்கு, நீதிபதி, ராஜா சொக்கலிங்கம் முன், ஏப்-6ம் தேதி விசாரணைக்கு வந்தது. நடிகை ரேவதியும், சுரேஷ் மேனனும் ஆஜராயினர். அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி வழக்கின் மீதான தீர்ப்பை, இன்று ஏப்ரல் 22ம் தேதிக்கு, நீதிபதி தள்ளி வைத்துள்ளார். அதன்படி இன்று இருவருக்கும் பரபஸ்பர விவாகரத்து வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.