மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
உயிர், மிருகம், சிந்துசமவெளி போன்ற விவகாரமான படங்களை இயக்கியவர் சாமி. இதில் உயிர் படத்தில், கணவன் இறந்து விட்டதால் கொளுந்தனை அண்ணி திருமணம் செய்து கொள்ள நினைக்கும் கதை. அதேபோல், சிந்து சமவெளியில், அப்பா மகளாக இருக்க வேண்டிய மாமன்-மருமகள் உறவை கணவன் மனைவி உறவாக்கினார். இதன்காரணமாக, ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் எதிர்ப்புக்கு ஆளானார் அவர்.
அதனால் இனிமேல் அந்த மாதிரியான ஆபாச படங்களை இயக்க மாட்டேன் என்று முடிவெடுத்திருக்கும் சாமி, தற்போது கங்காரு என்றொரு படத்தை இயக்குகிறார்.
இதுபற்றி அவர் கூறுகையில், இந்த படத்தில் காதல், அன்பு, பாசம், கோபம், தாபம் என்ற குடும்ப உறவுகளுக்கிடையே நடைபெறும் ஒரு தரமான கதையை எடுத்து வருகிறேன். இந்த படம் எல்லோருக்குமே பிடிக்கும். இதற்கு முன்பு இப்படியொரு படத்தை இந்த ஆள் எடுக்கிறாரே என்று என் மீது கோபம் கொண்ட அம்மாக்கள் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள அம்மாக்களெல்லாம் இந்த படத்தை விரும்பிப் பார்ப்பார்கள். அப்படி பார்த்து விட்டு, என்னை பாராட்டுவார்கள் என்கிறார் சாமி.