தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மாஜி ஹீரோயினிகளில் சரண்யா போன்றோர் அம்மா வேடங்களில் நடித்துக்கொண்டிருக்க, ஊர்வசியோ பேச்சியக்கா மருமகன் என்ற படத்தில் மாமியார் வேடத்தில் நடித்திருக்கிறார். கிட்டத்தட்ட இதுவும் இன்னொரு அம்மா வேடம் போன்றுதானாம். ஆனால் பக்கா கிராமத்து வேடமாம். தனது முதல் படமான முந்தானை முடிச்சு படத்திலேயே கிராமத்து பெண்ணாகத்தான் நடித்தார் ஊர்வசி. அந்த வகையில் இப்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு தான் ரீ-என்ட்ரி ஆகியிருக்கும் படத்திலும் தனக்கு கிராமத்து வேடம் என்பதால் மிகுந்த உற்சாகத்தில் நடித்தாராம் ஊர்வசி.
மேலும், கிராமத்து வயதான பெண்களைப்போன்று புடவை, உடுத்திக்கொண்டு நடித்த ஊர்வசி, டப்பிங்கைகூட அங்குள்ள பெண்கள் பேசுவதுபோன்றே பேசினாராம். அதனால் எனது நடிப்பைப்போலவே இப்படத்தில் டப்பிங்கும் பக்காவாக இருக்கும் என்று சொல்லும் ஊர்வசி, இப்படத்திற்கு டப்பிங் பேசியபோது, எனது நடிப்பைப்பார்த்து நானே மனம் நெகிழ்ந்து போனேன். அதோடு, இனி இந்த மாதிரி மனதை தொடும் கதாபாத்திரங்களாக தேடிப்பிடித்து நடிக்கவும் முடிவு செய்திருக்கிறேன் என்கிறார் ஊர்வசி.