வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? | ரூ.5 கோடி தாண்டாத தமிழ்ப் படங்கள் : ரூ.50 கோடியைக் கடந்த மலையாளப் படங்கள் | வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி |
பூலோகம், என்றென்றும் புன்னகை படங்களில் நடித்து வரும் த்ரிஷா இந்த படங்களோடு உறவுக்காரர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு நடிப்புக்கு டாடா காட்ட திட்டமிட்டிருந்தார். ஆனால், திடீரென்று வந்த ஒரு புதிய படவாய்ப்பு அவரது மனநிலையை மாற்றி விட்டது. அதனால் திருமணத்தை அப்புறம் வைத்துக்கொள்ளலாம் என்று சொல்லி கல்யாண கனவுகளில் நீந்திக்கொண்டிருந்த மாப்பிள்ளைக்கு பெரிய அதிர்ச்சி கொடுத்து விட்டாராம் த்ரிஷா.
என்ன காரணம்? என்று விசாரித்தபோது, ப்ரியம் படத்தை இயக்கிய பாண்டியன் தற்போது ஒரு புதிய படம் இயக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். அந்த படத்தில் மூன்று கதாநாயகிகளாம். இரண்டு வேடங்களுக்கு சுனைனா, ரம்யா நம்பீசனை புக் பண்ணியவர், இன்னொரு முக்கிய வேடத்தில நடிக்க த்ரிஷாவை அணுகினாராம். முதலில் மூன்று கதாநாயகியா? என்று இரண்டு மனதாக கதையைக்கேட்ட த்ரிஷா, உங்களுக்கு ஒரு கோடி சம்பளம் என்று சொன்னதும், கவிழ்ந்து விட்டாராம்.
அப்படின்னா, உடனே படப்பிடிப்பு ஆரம்பிச்சிடுங்க என்றாராம். அதைக்கேட்ட இயக்குனர், நீங்கள் இந்த ஆண்டு இறுதியில் திருமணம் செய்து கொள்ளயிருப்பதாக கூறப்படுகிறதே? என்று சொன்னபோது, என்னைப்பொறுத்தவரை எனது முதல் கணவரே சினிமாதான். அதுக்கு அப்புறம்தான் கட்டிக்கப்போறவரு. அதனால் நீங்க கேட்க தேதியில கால்சீட் தர்றேன். கல்யாணத்தை அடுத்து வருசத்துக்கு தள்ளி வச்சிட்டாப்போச்சு என்று சொல்ல, இயக்குனருக்கு ஷாக் ஆகிப்போச்சாம்.