மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் |
காதல், நட்பு இரண்டையும் மையமாக வைத்து சரவணன் இயக்கி வரும் படம் முகம் நீ அகம் நான். இந்த படத்தில் இரவெல்லாம் தூங்க விடாமல் கடிக்கும் கொசுவைப்பற்றி ஒரு ஜாலியான பாடல் உள்ளதாம்.
ஏ கூறுகெட்ட பிறப்பே, கூவத்தோட சிறப்பே
நித்தம் பெருகிறீயே கொசுவே,
சித்தம் கதி கலங்க நித்தம் கடிக்கிறீயே கொசுவே
ரத்தம் குடிக்கிறீயே கொசுவே...
என்று துவங்கும் இப்பாடலை புஷ்பவனம் குப்புசாமி பாடியிருக்கிறார். மோகன்ஜி இசையமைத்திருக்கிறார். நடன இயக்குனர் கூல் ஜெயந்த்தும், மைனா புகழ் நாகலட்சுமியும் ஆடியிருக்கிறார்கள். யூனிட்டில் எல்லாருமே தயாராகிவிட்டோம். திடீரென்று ஒரு செய்தி. டான்ஸ் மாஸ்டர் கூல் ஜெயந்தின் தாயார் இறந்துவிட்டார்கள் என்று. அதனால் கலங்கிப்போன ஜெயந்த் ஒரு ஓரமாய் சென்று அமர்ந்து விட்டாராம். இதனால் படபிடிப்பையே ரத்து செய்யும் நிலை ஏற்பட்டதாம். அன்றை படப்பிடிப்பை நிறுத்தினால் படக்குழுவுக்கு சுமார் ரூ.4 லட்சம் நஷ்டம் ஏற்படும் நிலை. இதனால் என்ன செய்வது என்று படக்குழுவினர் திணறி போய் நிற்க ஜெயந்த்தோ, என்னால் படப்பிடிப்பை நிறுத்தி நீங்கள் நஷ்டப்பட வேண்டாம். சொன்னபடி நானே அந்த பாடலில் நடனமாடுகிறேன் என்று ஸ்பாட்டுக்கு வந்து மைனா நாகலெட்சுமியுடன் சிரித்தபடியே நடனமாடினார். அவரது மனசுக்குள் இறந்த சோகம் எதுவும் வெளியில் தெரியாத அளவுக்கு அந்த பாடலில் நடித்துக்கொடுத்துள்ளார்.
இதையடுத்து கூல்ஜெயந்தின் தொழில் பக்தியை மதித்து, அடுத்த நாள் நடக்கவிருந்த படப்பிடிப்பையே நிறுத்தி விட்டு, அப்படக்குழுவினர் அனைவருமே அவரது அம்மாவின் இறுதி சடங்கில் கலந்து கொண்டார்களாம்.