ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கோ படம்தான் கார்த்திகாவுக்கு தமிழில் முதல் படம். ஆனால் இந்த படத்தில் நடித்தபோதுகூட படப்பிடிப்பு தளங்களுக்கு செல்லவில்லையாம் அவரது தாய்குலம் ராதா. அதையடுத்து, அன்னக்கொடி படத்தில் நடித்தபோதுகூட, கதை கேட்டதோடு சரியாம். மகள் எப்படி நடிக்கிறார் என்பதை வேடிக்கை பார்க்கக்கூட செல்லவில்லையாம் அவர்.
பெரும்பாலும், படப்பிடிப்பு தளங்களில் நடிகைகளைவிட அவர்களின் தாய்குலங்கள் செய்யும் அலம்பல்தான் ஜாஸ்தியாக இருக்கும். ஆனால் இங்கே தாய்குலம் ஒரு நடிகையாக இருந்தும் ஸ்பாட்டில் தலைகாட்டுவதே இல்லையே என்ன காரணம்? என்று கார்த்திகாவிடம் கேட்டால், என் அம்மாவுக்கு சினிமா தெரியும். நடிப்பில் இருக்கும் பிரச்னைகளை நன்கு உணர்ந்தவர். அதனால்தான், விலகியே நிற்கிறார். காரணம், நான் நடிக்கும்போது மற்றவர்கள் என்னைப்பார்த்துக் கொண்டிருந்தால் அது என் மனதை பாதிக்காது. ஆனால் என் அம்மா என்னை கவனிப்பது போல் நான் உணர்ந்தாலே நடிப்பு வராது. குறிப்பாக காதல் காட்சிகளில் சொல்லவே வேண்டாம்.
இது ஒரு நடிகையாய் என் அம்மாவுக்கு நன்றாக தெரியும். அதனால்தான் நான் நடிக்கும் படப்பிடிப்பு தளங்களுக்கே அவர் வருவதில்லை. மீறி வந்தாலும், நான் நடித்துக்கொண்டிருக்கிற ஏரியா பக்கமே தலைகாட்ட மாட்டார் என்று சொல்கிறார் கார்த்திகா.