டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
திடீரென மாயமாகி அனைவரையும் பரபரப்பாகிய நடிகை அஞ்சலி, விரைவில் சென்னை திரும்ப உள்ளார். சித்தி பாரதிதேவி, டைரக்டர் களஞ்சியம் ஆகியோர் தன்னை கொடுமைப்டுத்துவதாகவும், தனது சொத்துக்களை அபகரித்துவிட்டதாகவும், எனவே வீட்டை விட்டு வெளியேறி விட்டதாகவும் ஐதராபாத்தில் நடிகை அஞ்சலி பரபரப்பு குற்றம்சாட்டினார். அதேசமயம் அஞ்சலியை யாரோ கடத்தி வைத்திருப்பதாக அவரது சித்தி பாரதிதேவி சென்னை கமிஷனரிடம் புகார் அளித்தார். அதேபோல் அஞ்சலியின் அண்ணனும் ஐதராபாத்தில் அஞ்சலியை காணவில்லை என்று புகார் செய்தார்.
இந்த புகார் குறித்த விசாரணை நடந்து வந்த நிலையில், கடந்த 12ம் தேதி ஆந்திராவில் போலீசிடம் ஆஜரானார் அஞ்சலி. அப்போது தன்னை யாரும் கடத்தவில்லை என்றும், மனஉளைச்சலாலேயே வீட்டை விட்டு வெளியேறியதாகவும் விரைவில் பத்திரிகையாளர்களை சந்தித்து மற்ற விபரங்களை சொல்லுகிறேன் என்று கூறினார். அதனைத்தொடர்ந்து அஞ்சலி மீண்டும் படப்பிடிப்புகளில் பங்கேற்க துவங்கினார். தெலுங்கில் ரவிதேஜா ஜோடியாக பலுபு படத்திலும், இந்தியில் இருந்து தெலுங்கில் ரீமேக் ஆகும் போல்பச்சன் படத்திலும் நடிக்கிறார். இதில் வெங்கடேஷ் ஜோடியாக வருகிறார். போல்பச்சன் ரீமேக் படத்தின் படப்பிடிப்பு புனேயில் நடந்து வருகிறது. இப்படத்தில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து நடித்து வருகிறார். இதற்காக புனேயிலேயே தங்கியுள்ளார்.
இந்நிலையில், டைரக்டர் களஞ்சியம் இயக்கி கதாநாயகனாக நடிக்கும் ‘ஊர்சுற்றி புராணம்’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை அஞ்சலி நடிக்கிறார். இதில் ஏற்கனவே 10 நாட்கள் அஞ்சலி நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு அடுத்த வாரம் துவங்குகிறது. இதில் அஞ்சலி பங்கேற்று நடிக்க வேண்டும் என்றும், வர தவறினால் நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கங்களில் அஞ்சலி மீது நடவடிக்கை எடுக்கும்படி புகார் அளிப்பேன் என்றும் களஞ்சியம் கூறியுள்ளார். இப்படத்தில் அவர் நடிக்க மறுத்தால் படங்களில் நடிக்க அவருக்கு தடை விதிக்க வேண்டிய கட்டாயம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அப்படத்தில் நடிப்பதற்காக அவர் சென்னை வருவார் என தெரிகிறது. அப்போது போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் ஆஜராக திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.