ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
1 "டிவி சீரியலிலிருந்து, மீண்டும் சினிமாவுக்கு வந்தது பற்றி?
என் கணவர், ராஜகுமாரன், "ஒரு நல்ல கதை இருக்கு. இதில், நீ நடித்தால் நன்றாக இருக்கும் என்றார், அவர் கூறிய கதை பிடித்திருந்ததால், மீண்டும் சினிமாவுக்கு வந்து விட்டேன்.
2 சீரியல், சினிமா எது பிடிக்கும்?
திருமணத்துக்கு பின், சினிமாவில், என்னைத் தேடி, நல்ல கதைகள் வரவில்லை. சீரியல்களில், எனக்கு பிடித்த, கதைகள் கிடைத்தன. அதனால் நடிக்கிறேன். சினிமாவிலும், சீரியலிலும் எப்போதும் இருப்பேன்.
3 இந்த காலத்தில், "மெசேஜ் படங்கள் வெற்றி பெறுமா?
சீரியலில் நடிப்பதால், எனக்கு பெண் ரசிகைகள்அதிகம் உண்டு. தியேட்டருக்கு, பெண்கள் கூட்டம் வந்தால், படம் "ஹிட் டாகும். என் படத்தில், நல்ல மெசேஜ் இருக்கிறது. பெண்கள் அதிகம் தியேட்டருக்கு வருவாங்க. இதனால், என் படம், கண்டிப்பாக ஜெயிக்கும்.
4 "திருமதி தமிழ் படத்தை, உங்கள் கணவர் இயக்கியது ஏன்?
ராஜகுமாரன் படங்களில், வித்தியாசமான மெசேஜ்கள் இருந்தன. இந்த படத்தை, அவர் இயக்கினால், சொல்ல வந்த தகவலை, ஆழமாகவும், அழுத்தமாகவும் சொல்லமுடியும் என,
நினைத்தேன். அவர் இயக்கினார். நான் நடித்தேன். அவ்வளவு தான்.
5 வாழ்க்கை எப்படி போகிறது?
ஆடம்பர வாழ்க்கையை விட, நடுத்தர வாழ்க்கை எனக்கு பிடிச்சிருந்தது. சமுதாயத்தில் நல்ல பெயர் எடுக்க வேண்டும். வாழ்வதற்கு, ஒரு அர்த்தம் வேண்டும் என, நினைத்தேன். நினைத்தது போன்றே, வாழ்க்கை, நன்றாக இருக்கிறது. இந்த அமைதியான வாழ்க்கை தொடர வேண்டும் என்பதே, என் பிரார்த்தனை.