சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் |
ஒரு வார கால தலைமறைவு வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்த அஞ்சலி, இன்று (திங்கள்கிழமை) முதல் போல்பச்சன் என்ற தெலுங்கு படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார். அதையடுத்து பலுப்பு என்ற தெலுங்கு படத்திலும் பேட்ச் ஒர்க்கை முடித்துக்கொடுப்பதாக ஒத்துக்கொண்டுள்ளார் அஞ்சலி. இதையடுத்து பதறிப்போயிருந்த ஆந்திர படாதிபதிகள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.
மேலும், தன்னால் ஏற்பட்ட படப்பிடிப்பு இடையூறுகளுக்கு வருத்தமும், மன்னிப்பும் தெரிவித்து அஞ்சலி பேசிய வீடியோக்கள் இணையதளங்கள் மற்றும் தெலுங்கு சேனல்களில் வெளியாகி வருவதால், அனைவருக்கும் அஞ்சலி மீதான அதிருப்தி விலகி வருகிறதாம். இந்நிலையில் தனது பெயருக்கு ஏற்பட்ட களஙகத்தை மாற்ற, மேலும் சில முக்கிய சினிமா புள்ளிகளுக்கும் போன் போட்டு மன்னிப்பு கோரி வருகிறாராம் அஞ்சலி.
என்றாலும், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக அஞ்சலி புகார் அளித்திருந்ததால், ஐதராபாத்தில் அவர் தங்கியிருக்கும் ஓட்டலுக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுத்துள்ளார்களாம்.