டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
கடந்த வாரத்தில் திடீரென்று காணாமல் போனார் நடிகை அஞ்சலி. அதையடுத்து அவரது சகோதரர் ரவிசங்கர் என்பவர் ஐதராபாத் போலீசில் அஞ்சலியை காணவில்லை என்று புகார் கொடுத்தார். இதற்கிடையே, தன்னை தனது சித்தி பாரதிதேவி, டைரக்டர் களஞ்சியம் இருவரும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள நினைப்பதோடு, தனது சொத்துக்களையும் அபகரித்து விட்டதாக போனில் புகார் தெரிவித்த அஞ்சலி, அதன்காரணமாகவே மன உளச்சலால் நான் வீட்டை விட்டு வெளியேறினேன் என்று தெரிவித்தார். அதோடு எனது உயிருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் எனது சித்தியும், டைரக்டர் களஞ்சியமும்தான் காரணம் என்றும் தெரிவித்தார்.
அதையடுத்து, கடந்த வெள்ளிக்கிழமை அன்று இரவு ஐதராபாத் போலீசில் ஆஜரான அஞ்சலி தான் கடத்தப்படவில்லை என்றும், தனக்கு ஏற்பட்ட பிரசசினைகளையும் போலீசாரிடம் தெரிவித்தார். இதையடுத்து தற்போது மீண்டும் படங்களில் நடிக்கத் தொடங்கிவிட்டார்.
ஆனால், தன் மீது சொத்து அபகரிப்பு, கொலை முயற்சி என தெரிவித்த அஞ்சலி மீது சைதாப்பேட்டை கோர்ட்டில் வழககுத் தொடர்ந்துள்ளார் டைரக்டர் களஞ்சியம். இதுபற்றி அஞ்சலியிடம் விசாரித்து எனக்கு நீதி வழங்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.
இதற்கிடையே தற்போது களஞ்சியம் இயக்கி நாயகனாக நடித்து வரும் ஊர்சுற்றும் புராணம் என்ற படத்திலும் அஞ்சலிதான் நாயகியாகநடித்து வருகிறார். இதுவரை 15 நாட்கள் அவர் படத்தில் நடித்துள்ள அஞ்சலி, வருகிற 24ம் தேதி மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்வதாக ஏற்கனவே கால்சீட் கொடுத்துள்ளாராம். ஆனால், இந்தபிரச்சினைகளுககுப்பிறகு இதுவரை படம் சம்பந்தமாக அஞச்லிதரப்பில் இருந்து களஞ்சியத்துக்கு எந்தவித தகவலும் இல்லையாம்.
அதனால் குறிப்பிட்ட நாளில் அஞ்சலி தனது படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளாவிட்டால் அவர் மீது, தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம், இயக்குனர் சங்கம் போன்ற அமைப்புகளில் புகார் செய்வேன் என்று மிரட்டல் விடுத்துள்ள களஞ்சியம், ஆனால் எந்த பிரச்சினையும் செய்யாமல் அவர் ஸ்பாட்டுக்கு வந்து விட்டால், அவருடன் இணைந்து நடிப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.