Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

நாட்டை ஒருங்கிணைப்பதில்சினிமாவுக்குமுக்கிய பங்கு உள்ளது : அமிதாப் பச்சன்

14 ஏப், 2013 - 22:16 IST
எழுத்தின் அளவு:

1 சமீபத்தில் ஏற்பட்ட சந்தோஷம்?
ஆந்திர மாநில அரசு வழங்கும், என்.டி.ஆர்., விருது, சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்த விழாவில் எனக்கு வழங்கப்பட்டது. இதை எனக்கு கிடைத்த மிகப் பெரிய கவுரவமாக, கருதுகிறேன். ஐதராபாத்தில் எனக்கு கிடைத்த வரவேற்பும்,  மறக்க முடியாததாக அமைந்து விட்டது. இதற்காக, ஆந்திர மாநில அரசுக்கு நன்றி.

2 என்.டி.ஆருக்கும், உங்களுக்கும் உள்ள உறவு குறித்து?
என்.டி.ஆரும், நானும், நல்ல நண்பர்களாக இருந்தோம். அது, ஒரு இனிமையான காலம். அவரின், பல தெலுங்கு படங்கள், இந்தியில் ரீ-மேக் செய்யப்பட்டபோது, அவற்றில் நான் நடித்துள்ளேன். அதேபோல், என் இந்தி படங்கள், தெலுங்கில் ரீ-மேக் செய்யப்பட்டபோது, அவர் நடித்துள்ளார்.

3 சினிமா நடிகராக ஆனதற்காக  பெருமைப்படுகிறீர்களா?
ஆம். கட்டாயமாக பெருமைப்படுகிறேன். நம் நாட்டில், பல்வேறு கலாசாரங்கள், மொழிகள், மதங்கள் உள்ளன. இந்த வேறுபாடுகளை, ஒருங்கிணைக்கும் விஷயமாக, சினிமா திகழ்கிறது. அந்த சினிமாவில், நானும் ஒரு அங்கமாக இருப்பதில் பெருமைப்படுகிறேன்.

4 தாத்தா புரமோஷன் கிடைத்தது குறித்து?
ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. பேத்தி ஆராத்யாவுடனான, என் ஒவ்வொரு பொழுதும், இனிமையாக கழிகிறது. வாழ்க்கையில், எனக்கு கிடைத்த மிகப் பெரிய பரிசு, ஆராத்யா.

5 அடுத்த படம் பற்றி?
அடுத்த ஒரு சில  மாதங்களை, வெளிநாடுகளில், அமைதியாக கழிக்கப் போகிறேன். அதற்கு பின், போபாலில், நடக்கவுள்ள,  "சத்யாகிரகா படத்தின் இறுதிக் கட்ட படப் பிடிப்பில் பங்கேற்கிறேன். நீண்ட நாட்களுக்கு பின், நான் நடித்த படங்களில், முழு மன திருப்தியை அளித்துள்ள படம், சத்யாகிரகா தான்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

itashokkumar - Trichy,இந்தியா
17 ஏப், 2013 - 17:36 Report Abuse
itashokkumar இத கீழ்பாக்கத்தில் சேர்த்து சிகிச்சை அளிக்க வேண்டும். என்னனவோ ஒலருது.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in