ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
1 சமீபத்தில் ஏற்பட்ட சந்தோஷம்?
ஆந்திர மாநில அரசு வழங்கும், என்.டி.ஆர்., விருது, சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்த விழாவில் எனக்கு வழங்கப்பட்டது. இதை எனக்கு கிடைத்த மிகப் பெரிய கவுரவமாக, கருதுகிறேன். ஐதராபாத்தில் எனக்கு கிடைத்த வரவேற்பும், மறக்க முடியாததாக அமைந்து விட்டது. இதற்காக, ஆந்திர மாநில அரசுக்கு நன்றி.
2 என்.டி.ஆருக்கும், உங்களுக்கும் உள்ள உறவு குறித்து?
என்.டி.ஆரும், நானும், நல்ல நண்பர்களாக இருந்தோம். அது, ஒரு இனிமையான காலம். அவரின், பல தெலுங்கு படங்கள், இந்தியில் ரீ-மேக் செய்யப்பட்டபோது, அவற்றில் நான் நடித்துள்ளேன். அதேபோல், என் இந்தி படங்கள், தெலுங்கில் ரீ-மேக் செய்யப்பட்டபோது, அவர் நடித்துள்ளார்.
3 சினிமா நடிகராக ஆனதற்காக பெருமைப்படுகிறீர்களா?
ஆம். கட்டாயமாக பெருமைப்படுகிறேன். நம் நாட்டில், பல்வேறு கலாசாரங்கள், மொழிகள், மதங்கள் உள்ளன. இந்த வேறுபாடுகளை, ஒருங்கிணைக்கும் விஷயமாக, சினிமா திகழ்கிறது. அந்த சினிமாவில், நானும் ஒரு அங்கமாக இருப்பதில் பெருமைப்படுகிறேன்.
4 தாத்தா புரமோஷன் கிடைத்தது குறித்து?
ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. பேத்தி ஆராத்யாவுடனான, என் ஒவ்வொரு பொழுதும், இனிமையாக கழிகிறது. வாழ்க்கையில், எனக்கு கிடைத்த மிகப் பெரிய பரிசு, ஆராத்யா.
5 அடுத்த படம் பற்றி?
அடுத்த ஒரு சில மாதங்களை, வெளிநாடுகளில், அமைதியாக கழிக்கப் போகிறேன். அதற்கு பின், போபாலில், நடக்கவுள்ள, "சத்யாகிரகா படத்தின் இறுதிக் கட்ட படப் பிடிப்பில் பங்கேற்கிறேன். நீண்ட நாட்களுக்கு பின், நான் நடித்த படங்களில், முழு மன திருப்தியை அளித்துள்ள படம், சத்யாகிரகா தான்.