டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
ஜெயம்ரவி நடித்த எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி என்ற படத்தில் ரீ-என்ட்ரி கொடுத்தவர் நதியா. திருமணத்துக்குப்பிறகும் அவர் இளமையாக இருந்ததால், அந்த படத்தில் ஜெயம்ரவிக்கு அக்கா மாதிரியே இருந்தார். இருப்பினும் சுந்தர்.சி நாயகனாக நடித்த சண்ட படத்தில் அம்மா வேடத்தில் நடிக்க சம்மதித்தார். ஆனபோதும் திருமணத்துக்கு முன்பு கண்டிசன் போட்டு நடித்தது போலவே இப்போதும் என்னை எந்த நடிகரும் தொட்டு நடிக்கவோ, உரசி நடிக்கவோ கூடாது என்றெல்லாம் ஏகத்துக்கு கண்டிசன் போட்டார். அதனால், ஒரு காட்சியில் கதைப்படி சுந்தர்.சியின் அத்தையாக நடித்த அவரை சுந்தர்.சி தூக்கிச்செல்வது போன்ற காட்சியில்கூட தன்னை யாரும் தொட்டு தூக்கக்கூடாது என்று தடை போட்டு விட்டார். அதனால், அந்த காட்சியை டூப் நடிகையை வைத்து படமாக்கினார்கள்.
இப்படி ரீ-என்ட்ரி ஆனபோதும் ஏடாகூடமாக நதியா கண்டிசன் போட்டதினால் அதன்பிறகு அவரை எந்த இயக்குனர்களும் ஏறெடுத்துக்கூட பார்க்கவிலலை. அதனால் தமிழில் பட வாய்ப்பில்லாமல் மலையாளத்துக்கு சென்று ஓரிரு படங்களில் நடித்த நதியா, இப்போது தெலுங்கில் தஞ்சமடைந்துள்ளார். அங்கு ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகியிருப்பவர், மளிகை கடைக்கு பில் போடுவதைப்போன்று ஒரு பெரிய கண்டிசன் பேப்பரையே தூக்கிப்போட்டாராம. இருப்பினும், அவசரத்துக்கு அம்மா நடிகை கிடைக்காததால் நதியாவின் கண்டிசன்களுக்கு உட்பட்டு அப்படத்தில் நடிக்க வைத்துள்ளார்களாம்.