பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
நீவருவாய் என, விண்ணுக்கும் மண்ணுக்கும், காதலுடன் போன்ற படங்களை இயக்கியவர் இராஜகுமாரன். நடிகை தேவயானியின் கணவரான இவர், தற்போது திருமதி தமிழ் என்றொரு படத்தை இயக்கியிருக்கிறார். அதோடு விடாமல், அந்த படத்தில் தானே நாயகனாகவும் ஆக்ட் கொடுத்திருக்கிறார். என்றபோதும், நம்மையெல்லாம் ரசிகர்கள் நாயகனாக ஏற்றுக்கொள்வார்களா? என்ற பயம் இராஜகுமாரனின் மனதில் இருந்து கொண்டேயிருந்ததாம். (நியாயம்தானே)
ஆனால், படத்தின் ட்ரெய்லர் காட்சி சென்னையிலுள்ள உதயம் திரையரங்கில் திரையிடப்பட்டபோது, அதன் ரெஸ்பான்ஸை தெரிந்து கொள்ள ஒருநாள் விசிட் அடித்தாராம் அவர். அப்போது இவரைப்பார்த்ததும் ரசிகர்கள் உற்சாக முழக்கமிட்டார்களாம். இதனால், என்னைப்பார்த்ததும் நீயெல்லாம் ஏன்டா ஹீரோவா நடிக்க வந்தேன்னு ரசிகர்கள் கத்துவாங்களோன்னு நெனச்சேன். ஆனா அவர்கள் என்னை உற்சாகப்படுத்தும் வகையில் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள். இதனால் என்னை ரசிகர்கள் ஹீரோவா ஏத்துக்குவாங்கன்னு நெனைக்கிறேன் என்று சந்தோசத்தில் மிதந்து கொண்டிருக்கிறார் இராஜகுமாரன்.