பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
சென்னையை விட்டு வெளியேறி, ஐதரபாத்தில் மாயமாகிப்போன நடிகை அஞ்சலி எங்கே இருக்கிறார் என்று தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா என மூன்று மாநில போலீசார் தேடி வருகின்றனர். கற்றது தமிழ், அங்காடித்தெரு, எங்கேயும் எப்போதும் போன்ற படங்களின் மூலம் பிரபலமான நடிகை அஞ்சலி தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருக்கிறார். தமிழ் மட்டுமல்லாது, தாய் மொழியான தெலுங்கிலும் பிஸி நடிகையாக இருக்கிறார்.
இந்நிலையில் சினிமாவில் தன்னை அறிமுகப்படுத்திய டைரக்டர் மு.களஞ்சியம் மீதும், சினிமாவுக்கு தன்னை அழைத்து செல்ல உதவியாக இருந்த தனது தாய் என்று சொல்லி வந்த சித்தி பாரதி தேவி மீதும் பரபரப்பு குற்றச்சாட்டுகளை அடுக்கி வைத்தார் நடிகை அஞ்சலி. இருவரும் தனது கோடிக்கணக்கான சொத்தை மோசடி செய்ததாகவும், இருவரும் தன்னை கொடுமைப்படுத்தியதாகவும், தனக்கும், தனது குடும்பத்துக்கும் அவர்களால் ஆபத்து என்றும் கண்ணீர் மல்க ஐதராபாத்தில் பேட்டி கொடுத்தார் அஞ்சலி. ஆனால் அஞ்சலியின் குற்றச்சாட்டை களஞ்சியமும், பாரதி தேவியும் மறுப்பு தெரிவித்தன.
இதற்கிடையே ஐதராபாத்தில் தங்கியிருந்த அஞ்சலி நேற்று முதல் மாயமானார். அவர் எங்கே இருக்கிறார் என்ற தகவல் கூட யாருக்கும் தெரியவில்லை. தனது சகோதரியை கண்டுபிடித்து தர கோரி அஞ்சலியின் சகோதரர் ஐதராபாத்தில் போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார். இது ஒரு புறம் இருக்க அஞ்சலியின் சித்தி பாரதி தேவியும் அஞ்சலியை கண்டுபிடித்து தர கோரி சென்னை கமிஷனரை சந்தித்து புகார் அளித்து இருக்கிறார்.
அவர் தனது மனுவில், என் மீதும், டைரக்டர் களஞ்சியம் மீதும் அவதூறாக அஞ்சலி பேட்டியளித்ததை பத்திரிகையில் பார்த்து அதிர்ச்சியானோம். அஞ்சலி அப்படி பேசக்கூடியவர் அல்ல. அஞ்சலியை யாரோ கடத்தி துன்புறுத்தி எங்களுக்கு எதராக குற்றச்சாட்டுகள் சொல்லி வற்புறுத்துவதாக தெரிகிறது என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் பெங்களூர் சென்று இருக்கலாம் என்ற ஒரு பேச்சும் எழுந்துள்ளது. இதனால் அஞ்சலியை தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் கர்நாடகா என மூன்று மாநில போலீசாரும் வலை வீசி தேடி வருகின்றனர்.