ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
"முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு படத்தின் மூலம், தமிழுக்கு அறிமுகமான பூர்ணாவுக்கு, அதைத் தொடர்ந்து, சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால், மலையாளம், தெலுங்கு திரையுலகம் பக்கம், கவனம் செலுத்தி வந்தவர், தற்போது மீண்டும், தமிழுக்கு திரும்பியுள்ளார். "தகராறு, படம் பேசும் ஆகிய இரண்டு படங்களிலும், பூர்ணா மேடம் தான், ஹீரோயின்.அதிலும், "தகராறு படத்தில், இவருக்கு, செமத்தியான வில்லேஜ் கேரக்டராம். எதற்காகவும் பயப்படாத, துணிச்சலான, மதுரை பெண்ணாக நடிக்க வேண்டும் என்று, இயக்குனர், பூர்ணாவிடம் கூறியபோது, "துணிச்சலா, அப்படின்னா என, கேட்டாராம்.
இதையடுத்து, மதுரையில் படப் பிடிப்பு நடந்தபோது, "இங்குள்ள பெண்களை பாருங்கள். எவ்வளவு தைரியமாக இருக்கின்றனர். அவர்களை ஸ்டடி செய்து, அதேபோல், நீங்கள் நடிக்க வேண்டும் என்றாராம். இதற்குபின் தான், இயற்கையாக நடித்து, படப் பிடிப்பில், அனைவரிடமும் பாராட்டு பெற்றாராம்.இதுகுறித்து, பூர்ணா அளித்த ஒரு பேட்டியில்,"உண்மையிலேயே, மதுரை பொண்ணுங்க,தைரியமானவங்க. இந்த தைரியம், அவர்களுக்கு இயற்கையாகவே அமைந்துள்ளது. படப்பிடிப்பு மதுரையில் நடக்கும்போது, இதை நேரடியாகவே பார்த்தேன் என்கிறார்.