தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
களவாணி, கலகலப்பு, சில்லுன்னு ஒரு சந்திப்பு போன்ற படங்களில் நடித்தபோது, ஓவியாவுக்கு விமல் நேரடி சிபாரிசு செய்வதாக கிசுகிசுக்கள் பரவின. அதை விமலும் மறுக்கவில்லை. ஆனால் ஒரு கட்டத்தில் இந்த செய்தி பத்திரிகையாளர் சந்திப்பில் கேட்கப்பட்டபோது, இனி ஓவியாவுக்கு சிபாரிசு செய்ய மாட்டேன் என்று திட்டவட்டமாக சொன்னார் விமல். அதேபோல் பின்னர் ஓவியாவை கழட்டி விட்டார் அவர். அதனால் அடுத்தபடியாக படவாய்ப்பே இல்லாமல் இருந்த ஓவியா தெலுங்கு படங்களில் நடிக்கச்செல்வதாக சொல்லிக்கொண்டு கேரளாவிலேயே முகாமிட்டிருந்தார்.
ஆனால் இந்த நேரத்தில், மூடர் கூடம் என்றொரு பட வாய்ப்புக்கிடைக்க, அப்படத்தில் சத்தமில்லாமல் நடித்து முடித்திருக்கிறார் ஓவியா. இந்த செய்தியை கேள்விப்பட்ட விமல், என்ன ஓவியா, படமெல்லாம் நடிச்சிருக்கே போல என்று கேட்டாராம். அதற்கு, ஏன் விமல் இல்லேன்னா எங்களால சினிமாவுல நடிக்க முடியாதா? என்று அவரை மடக்கிய ஓவியா, இந்த படம் மட்டுமில்ல, இன்னும் ரெண்டு படங்கள்ல பேசிக்கிட்டிருக்கேன். அந்த படங்கள்ல என்னை கூடுதல் கவர்ச்சி காட்ட சொல்றாங்க. அதனால் இன்னும் பூசினாற் போன்று சதை போட்டு வருகிறேன். அதன்பிறகு எனக்கு யாருடைய சிபாரிசும் தேவையில்லை. என்னைத்தேடி தானாக படங்கள் வரும் என்று விமலுக்கு சொடக் போட்டு பதில் கொடுத்திருக்கிறார் ஓவியா.