'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சிந்து சமவெளி படத்தில் அறிமுகமான, கேரளத்து பைங்கிளி, அமலா பாலுக்கு, அதற்கு பின், பெரிய அளவில் வாய்ப்பு கிடைக்கவில்லை. வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருந்த, அவருக்கு, "மைனாவின் வரவால், வசந்தத்துடன், அதிர்ஷ்டமும் தேடி வந்தது. தமிழில், விஜய்,விக்ரம், ஜெயம் ரவி போன்றோருடனும், தெலுங்கில், அல்லு அர்ஜுன், ராம்சரண் தேஜா போன்ற, முன்னணி ஹீரோக்களுடன், ஜோடி போடும் வாய்ப்பு, அவரை தேடி வந்தது. தமிழில், தெலுங்கில், முன்னணி நடிகைகளின் வரிசையில் இடம் பிடித்து விட்டதால், உற்சாகத்தில் இருக்கிறார், அமலா பால்.அதிக படங்களில் நடிப்பதாலும், வாய்ப்புகள் தொடர்ந்து, குவிவதாலும், அமலாவின் வங்கி லாக்கர், நிரம்பி வழிகிறதாம்.
இதுவரை, லட்சங்களில் மட்டுமே, நோட்டுகளை வாங்கி வந்த, அமலா, இப்போதெல்லாம், கால்ஷீட் கேட்டு வரும், தயாரிப்பாளர்களிடம், ஒரு விரலை காட்டி, "1 சி ( 1 கோடி ரூபாய்) கொடுங்க என்கிறாராம். ஆனாலும், தமிழ், தெலுங்கு திரையுலகின் ரசிகர்கள், அமலா பாலை பார்ப்பதற்காக, தியேட்டருக்கு படையெடுப்பதால், அவர் கேட்கும் தொகையை தர, தயாராக இருக்கிறார்களாம்.