ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கடந்த சில ஆண்டுகளாக சினிமாவில் கலைஞர்களின் படக்கூலியானது தாறுமாறாக உயர்ந்து வருகிறது. ஒரு நாளைக்கு பல லட்சங்கள் கேட்கிறார்கள் பெரும்பாலான நடிகர்கள். அதேபோல் நடிகைகளோ சில படங்கள் ஹிட்டாகி விட்டாலே ஒரு கோடி தரவேண்டும் என்று கையை உயர்த்துகிறார்கள். இதனால் வேறு வழியில்லாமல் ஓடுற குதிரைகள் மீது பணம் கட்டும் படாதிபதிகள் அவர்கள் கேட்கிற சம்பளத்தை கொடுத்து படம் தயாரித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், விக்ரம் நடித்த தெய்வத்திருமகள் படத்தில் நடித்த பேபி சாராவுக்கு, ஆர்.சுந்தரராஜன் இயக்கி வரும் சித்திரையில் நிலாச்சோறு என்ற படத்தில் நடிக்க ஒரு நாளைக்கு ஒரு லட்சம் சம்பளம பேசப்பட்டுள்ளதாம். ரொம்ப ஜாஸ்தியாக இருக்கிறதே என்று சொன்னபோது, இதுதான் சம்பளம், வேண்டுமானால் வாருங்கள். இல்லையேல் சென்று விடுங்கள். எங்களுக்கு நிறைய ஆபர் இருக்கிறது என்றார்களாம் சாராவின் பெற்றோர். அதனால் இன்னும் தாமதித்தால் அடுத்து இன்னொரு விரலையும் சேர்த்து உயர்த்தி காட்டி விடுவார்கள் என்று ஒரு நாளைக்கு ஒரு லட்சத்துக்கே அக்ரிமெண்ட் போட்டார்களாம்.
இதுபற்றி இயக்குனர் ஆர்.சுந்தர்ராஜன் கூறுகையில், அம்மாவை இழந்த ஒரு சிறிய பெண் எப்படியெல்லாம் கஷ்டப்படுகிறாள் என்பதை மையமாக வைத்துதான் இப்படத்திற்கான கதை பண்ணியிருக்கிறேன். அதில் ஒரு தெரிந்த முகம் குழந்தை நட்சத்திரமாக நடித்தால் சிறப்பாக இருக்கும் என்பதால்தான் சாராவை புக் பண்ணினேன். வித்தியாசமான கதைக்களம் என்பதால், அவரும் அற்புதமாக நடித்து வருகிறார் என்கிறார். தெயவத்திருமகள் படத்திலும் இதேபோன்று அம்மாவை இழந்த பெண்ணாகத்தான் சாரா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.