Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பல வருடங்களுக்கு பிறகு இளையராஜா-மணிரத்னம் சந்திப்பு!!

07 ஏப், 2013 - 16:45 IST
எழுத்தின் அளவு:

கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு பிறகு இசைஞானி இளையராஜாவும், டைரக்டர் மணிரத்னமும் சந்தித்து பல மணி நேரம் மனம்விட்டு பேசியுள்ளனர். தமிழ் சினிமாவில் டைரக்டர் மணிரத்னம் அறிமுகமானதில் தொடர்ந்து தளபதி படம் வரை அவரது அநேக படங்களுக்கு இசைஞானி இளையராஜா தான் இசையமைத்துள்ளார். இவர்களது கூட்டணியில் வெளிவந்த படங்களும் சரி, பாடல்களும் சரி சூப்பர் ஹிட்டானவை. கடைசியாக இருவரும் ரஜினியின் தளபதி படத்தில் பணியாற்றினர். அதன்பின் இருவருக்கும் இடையே ஏற்பட்ட மனகசப்பால், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானை ‌சினிமாவிற்கு கொண்டு வந்தார் மணி. ரோஜா தொடங்கி கடைசியாக வெளிவந்த கடல் வரை ஏ.ஆர்.ரஹ்மான் தான் மணிரத்னம் படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில் பிரபல இந்தி டைரக்டர் பால்கி இயக்கும் புதிய படத்திற்கு மும்பையில் இசையமைத்து வருகிறார் இளையராஜா. அப்போது மணிரத்னம், இளையராஜாவை சந்தித்துள்ளார். இந்த ஏற்பாட்டை டைரக்டர் பால்கி தான் செய்துள்ளார். பல வருடங்களுக்கு பிறகு சந்திப்பதால் இருவரும் நீண்‌ட நேரம் மனம்விட்டு தங்களது பகையை மறந்து பேசிக் கொண்டனர். இவர்களது சந்திப்பு, இனி வருங்காலத்தில் இருவரும் இணைவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக சினிமா வட்டாரத்தில் பேசிக்கொள்கின்றனர்.

Advertisement
கருத்துகள் (11) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (11)

Anthuvan - Cuddalore,இந்தியா
31 ஆக, 2013 - 15:36 Report Abuse
Anthuvan raja is the 8th wonder of the world
Rate this:
Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
12 ஆக, 2013 - 16:44 Report Abuse
Vasudevan Srinivasan ஆரோகியமான விஷயம்தான் இந்த சந்திப்பு மணிரத்னம் சாரின் அடுத்த படத்தில் இருவரையும் இணைத்தால் நன்றாக இருக்கும் காரணம் நான் மணிரத்னம் சாருக்கு மௌன ராகம் வரை ரசிகனாக இருந்தவன் ஆனால் அவர் வன்முறைக்கு மாறிய பின் அவர் படங்களை பார்ப்பதில்லை (நாட்டில் நடப்பதைத்தான் எடுக்கிறார் என்ற வாதத்தை என்னால் ஏற்க முடியாது
Rate this:
adhavan - madurai,இந்தியா
09 ஏப், 2013 - 09:37 Report Abuse
adhavan நான் காத்துகொண்டு இருக்கிறேன்.
Rate this:
Angry ஜெய் - Srivilliputtur,இந்தியா
08 ஏப், 2013 - 15:09 Report Abuse
Angry ஜெய் இப்ப மட்டும் மணி படம் ஓடிருமாக்கும் ?
Rate this:
rajesh - cumpum  ( Posted via: Dinamalar Android App )
08 ஏப், 2013 - 13:54 Report Abuse
rajesh Endrum raja
Rate this:
மேலும் 6 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in