கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு பிறகு இசைஞானி இளையராஜாவும், டைரக்டர் மணிரத்னமும் சந்தித்து பல மணி நேரம் மனம்விட்டு பேசியுள்ளனர். தமிழ் சினிமாவில் டைரக்டர் மணிரத்னம் அறிமுகமானதில் தொடர்ந்து தளபதி படம் வரை அவரது அநேக படங்களுக்கு இசைஞானி இளையராஜா தான் இசையமைத்துள்ளார். இவர்களது கூட்டணியில் வெளிவந்த படங்களும் சரி, பாடல்களும் சரி சூப்பர் ஹிட்டானவை. கடைசியாக இருவரும் ரஜினியின் தளபதி படத்தில் பணியாற்றினர். அதன்பின் இருவருக்கும் இடையே ஏற்பட்ட மனகசப்பால், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானை சினிமாவிற்கு கொண்டு வந்தார் மணி. ரோஜா தொடங்கி கடைசியாக வெளிவந்த கடல் வரை ஏ.ஆர்.ரஹ்மான் தான் மணிரத்னம் படத்திற்கு இசையமைத்து வருகிறார்.
இந்நிலையில் பிரபல இந்தி டைரக்டர் பால்கி இயக்கும் புதிய படத்திற்கு மும்பையில் இசையமைத்து வருகிறார் இளையராஜா. அப்போது மணிரத்னம், இளையராஜாவை சந்தித்துள்ளார். இந்த ஏற்பாட்டை டைரக்டர் பால்கி தான் செய்துள்ளார். பல வருடங்களுக்கு பிறகு சந்திப்பதால் இருவரும் நீண்ட நேரம் மனம்விட்டு தங்களது பகையை மறந்து பேசிக் கொண்டனர். இவர்களது சந்திப்பு, இனி வருங்காலத்தில் இருவரும் இணைவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக சினிமா வட்டாரத்தில் பேசிக்கொள்கின்றனர்.