ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
முன்பு தெய்வததிருமகள் படத்தில் அமலாபாலுவுக்கு சான்ஸ் கொடுத்தீர்கள். அப்போதிலிருந்து, அமலாபாலை உங்களுடன் இணைத்து காதல் கிசுகிசுக்கள் புகைந்தன. நெருப்பில்லாமல் புகையாதே? எனறு இயக்குனர் விஜய்யைக்கேட்டால், நெருப்பில்லாமல் புகையாதுதான். ஆனால் இந்த விசயத்தில் நெருப்பே இல்லாமல்தான் புகைந்துகொண்டிருக்கிறது. என்னைப்பொறுத்தவரை அமலாபால் ஒரு நடிகை. நான் ஒரு டைரக்டர் அவ்வளவுதான். எங்களுக்கிடையிலான உறவும் அப்படித்தான்.
மேலும், தலைவா படத்தில் விஜய்க்கு ஜோடியாக துறுதுறுவென்று ஒரு நடிகை தேவைப்பட்டார். அதற்காக, தீபிகா படுகோனே, சோனம் கபூர் என்று சில இந்தி நடிகைகளிடம் கால்சீட் கேட்டேன். ஆனால் அவர்கள் கால்சீட் தருவதாக சொன்ன தேதிக்குள் நாங்கள் படத்தையே முடித்து விட திட்டமிட்டிருந்தோம்., அப்போது, எங்களது கால்சீட்டுக்கு ஒத்து வர்ற மாதிரி நடிகையாக தேடியபோதுதான் அமலாபால் செட்டாகி வந்தார். அதிலும் விஜய் படம் என்றதும் ஒரு தெலுங்கு படத்தைகூட தியாகம் செய்தார். அப்படித்தான் அமலாபால் இந்த படத்தில் நடிக்க கமிட்டானார். மற்றபடி அவரை நடிக்க வைத்து விடவேண்டும் என்று திட்டமிட்டு எதையும் செய்யவில்லை என்கிறார் விஜய்.