விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் |
பாய்ஸ் படத்தில் அறிமுகமானவர் சித்தார்த். அதன்பிறகு பல படங்களில் நடித்தவர், தெலுங்கில் முன்னணி நடிகராக விளங்கி வருகிறார். இருப்பினும் தமிழ் நாட்டு நடிகரான அவருக்கு தமிழில் ஒரு நிலையான இடத்தை பிடித்து விட வேண்டும் என்கிற ஆர்வமே அதிகமாக இருக்கிறது. அதனால்தான் காதலில் சொதப்புவது எப்படி படத்துக்குப்பிறகு ஒரு முறை டைரக்டர் சுந்தர்.சியை பார்த்தவர், தமிழ்ல நிறைய படம் பண்ணனும்னு ஆசையா இருக்கேன் சார். நீங்க என்ன வச்ச படம் பண்றதா இருந்தா எப்ப கேட்டாலும் கால்சீட் தர்றேன்னு சொன்னாராம் சித்தார்த். அதன்பிறகுதான் சித்தார்த்தை வச்சி படம் பண்ணனுங்கிற எண்ணம் ஏற்பட அவருக்கேற்ற கதை ரெடி பண்ணியிருக்கிறார் சுந்தர்.சி.
அதன்பிறகு உருவானதுதான் தீயா வேலை செய்யனும் குமாரு என்கிற படக்கதை. இந்த படத்தில் இதுவரை தமிழில் நடிக்காத அளவுக்கு பரபரவென்று பரபரப்பான நடிகராக நடித்திருக்கிறாராம் சித்தார்த். இருப்பினும் இப்படத்தின் ஆடியோ விழாவில் பேசியவர்கள் அவரை சாக்லேட் பாய் என்று புகழ்ந்து பேச டென்சன் ஆகி விட்டார் சித்தார்த். கடைசியாக அவர் மைக்கை பிடித்து பேசும்போது, சினிமாவுல எனக்கு பிடிக்காத வார்த்தை ஒன்று இருக்குன்னா அது சாக்லேட் பாய்தான். ஆரம்ப காலங்கள்ல வேணும்னா நான் அப்படி நடிச்சிருக்கலாம். ஆனா இப்ப என்னோட ரூட் மாறிடுச்சு. ரொமாண்டிக் மட்டுமில்லாம, ஆக்சன் கதைகள்லகூட நடிச்சிருக்கேன். அதனால, இனிமே என்னை யாரும் சாக்லேட் பாய்ன்னு சொல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார் சித்தார்த்.