பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
பாய்ஸ் படத்தில் அறிமுகமானவர் சித்தார்த். அதன்பிறகு பல படங்களில் நடித்தவர், தெலுங்கில் முன்னணி நடிகராக விளங்கி வருகிறார். இருப்பினும் தமிழ் நாட்டு நடிகரான அவருக்கு தமிழில் ஒரு நிலையான இடத்தை பிடித்து விட வேண்டும் என்கிற ஆர்வமே அதிகமாக இருக்கிறது. அதனால்தான் காதலில் சொதப்புவது எப்படி படத்துக்குப்பிறகு ஒரு முறை டைரக்டர் சுந்தர்.சியை பார்த்தவர், தமிழ்ல நிறைய படம் பண்ணனும்னு ஆசையா இருக்கேன் சார். நீங்க என்ன வச்ச படம் பண்றதா இருந்தா எப்ப கேட்டாலும் கால்சீட் தர்றேன்னு சொன்னாராம் சித்தார்த். அதன்பிறகுதான் சித்தார்த்தை வச்சி படம் பண்ணனுங்கிற எண்ணம் ஏற்பட அவருக்கேற்ற கதை ரெடி பண்ணியிருக்கிறார் சுந்தர்.சி.
அதன்பிறகு உருவானதுதான் தீயா வேலை செய்யனும் குமாரு என்கிற படக்கதை. இந்த படத்தில் இதுவரை தமிழில் நடிக்காத அளவுக்கு பரபரவென்று பரபரப்பான நடிகராக நடித்திருக்கிறாராம் சித்தார்த். இருப்பினும் இப்படத்தின் ஆடியோ விழாவில் பேசியவர்கள் அவரை சாக்லேட் பாய் என்று புகழ்ந்து பேச டென்சன் ஆகி விட்டார் சித்தார்த். கடைசியாக அவர் மைக்கை பிடித்து பேசும்போது, சினிமாவுல எனக்கு பிடிக்காத வார்த்தை ஒன்று இருக்குன்னா அது சாக்லேட் பாய்தான். ஆரம்ப காலங்கள்ல வேணும்னா நான் அப்படி நடிச்சிருக்கலாம். ஆனா இப்ப என்னோட ரூட் மாறிடுச்சு. ரொமாண்டிக் மட்டுமில்லாம, ஆக்சன் கதைகள்லகூட நடிச்சிருக்கேன். அதனால, இனிமே என்னை யாரும் சாக்லேட் பாய்ன்னு சொல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார் சித்தார்த்.