டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பாய்ஸ் படத்தில் அறிமுகமானவர் சித்தார்த். அதன்பிறகு பல படங்களில் நடித்தவர், தெலுங்கில் முன்னணி நடிகராக விளங்கி வருகிறார். இருப்பினும் தமிழ் நாட்டு நடிகரான அவருக்கு தமிழில் ஒரு நிலையான இடத்தை பிடித்து விட வேண்டும் என்கிற ஆர்வமே அதிகமாக இருக்கிறது. அதனால்தான் காதலில் சொதப்புவது எப்படி படத்துக்குப்பிறகு ஒரு முறை டைரக்டர் சுந்தர்.சியை பார்த்தவர், தமிழ்ல நிறைய படம் பண்ணனும்னு ஆசையா இருக்கேன் சார். நீங்க என்ன வச்ச படம் பண்றதா இருந்தா எப்ப கேட்டாலும் கால்சீட் தர்றேன்னு சொன்னாராம் சித்தார்த். அதன்பிறகுதான் சித்தார்த்தை வச்சி படம் பண்ணனுங்கிற எண்ணம் ஏற்பட அவருக்கேற்ற கதை ரெடி பண்ணியிருக்கிறார் சுந்தர்.சி.
அதன்பிறகு உருவானதுதான் தீயா வேலை செய்யனும் குமாரு என்கிற படக்கதை. இந்த படத்தில் இதுவரை தமிழில் நடிக்காத அளவுக்கு பரபரவென்று பரபரப்பான நடிகராக நடித்திருக்கிறாராம் சித்தார்த். இருப்பினும் இப்படத்தின் ஆடியோ விழாவில் பேசியவர்கள் அவரை சாக்லேட் பாய் என்று புகழ்ந்து பேச டென்சன் ஆகி விட்டார் சித்தார்த். கடைசியாக அவர் மைக்கை பிடித்து பேசும்போது, சினிமாவுல எனக்கு பிடிக்காத வார்த்தை ஒன்று இருக்குன்னா அது சாக்லேட் பாய்தான். ஆரம்ப காலங்கள்ல வேணும்னா நான் அப்படி நடிச்சிருக்கலாம். ஆனா இப்ப என்னோட ரூட் மாறிடுச்சு. ரொமாண்டிக் மட்டுமில்லாம, ஆக்சன் கதைகள்லகூட நடிச்சிருக்கேன். அதனால, இனிமே என்னை யாரும் சாக்லேட் பாய்ன்னு சொல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார் சித்தார்த்.