மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
விஜய் இயக்கத்தில், விஜய் நடிக்கும் தலைவா படத்தில் நாயகியாக நடித்து வருபவர் அமலாபால். ஆரம்பத்தில் இப்படத்தில் இன்னொரு நாயகியாக மும்பையைச்சேர்ந்த ராகினி என்றொரு நடிகை நடித்ததால், தனது கதி அதோகதியாகி விடுமோ என்று ஆடிப்போயிருந்த அமலா, இப்போது தான்தான் முதன்மை நாயகி என்பது ஊர்ஜிதமாகி விட்டதால் சகஜமான மனநிலைக்கு திரும்பிவிட்டார். ஸ்பாட்டில் எந்நேரமும் ஒரே அரட்டை அமர்க்களம்தானாம். ஒரு சிறிய கேப் கிடைத்தாலும், கூட்டணியாக சிலரை சேர்த்துக்கொண்டு, சீட்டாட்டத்தை தொடங்கி விடுகிறார். அப்படி பழகிய பழக்கம், சமீபத்தில் அப்படத்தின் படப்பிடிப்பு ஆஸ்திரேலியாவில் நடந்தபோதும் தொடர்ந்திருக்கிறது.
அங்கு படப்பிடிப்பு இல்லாமல் ஓய்வாக இருக்கும் நாட்களில் தனது சக நண்பர்களுடன் ஊர் சுற்றிப்பார்க்க கிளம்பிய அமலாபால், அங்கு கண்ணில் தென்பட்ட ஒரு சூதாட்ட விடுதிக்குள் நுழைந்து விட்டார். அங்கு உள்ளூர்வாசி மட்டுமின்றி வெளிநாட்டை சேர்ந்த பலரும் கூட்டம் கூட்டமாக சூதாட்டம் விளையாடியுள்ளனர். அமலாபால் சூதாட்ட களத்தில் இறங்கியுள்ளார். ஆரம்பத்தில் கொஞ்சம் பணத்தை இழந்துள்ளார். பின்னர் நடிகர் சுரேஷ் உடன் சேர்ந்து கொண்டு சூதாட்டம் ஆடி கொஞ்சம் பணமும் சம்பாதித்தார்.
இதுகுறித்து நடிகை அமலாபால் கூறும்போது, சூதாட்டத்தில் எனக்கு லக்கி ஜோடி சுரேஷ்தான். நானும் அவரும் ஒரு ஆட்டத்தில் வென்றோம் என்று மகிழ்ச்சி பொங்க கூறியுள்ளார்.