ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கான பத்ம விருதுகள் இன்று டில்லியில் உள்ள ராஷ்டிரபதிபவனில் வழங்கப்பட்டது. நாட்டின் மிக உயரிய விருதுகளான பத்ம விருதுகளை இன்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வழங்கினார். முன்பே கூறியதுபோல் விழாவைப் புறக்கணித்தார் பாடகி ஜானகி. பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு மத்திய அரசு பத்மவிபூஷன், பத்மபூஷன், பத்மஸ்ரீ விருதுகள் வழங்கி வருகிறது. 2013-ம் ஆண்டுக்கான விருது பெறுவோர் பட்டியலை மத்திய அரசு கடந்த ஜனவரி மாதம் வெளியிட்டது. இதன் படி நடிகை ஸ்ரீ தேவிக்கு பத்மஸ்ரீ விருதும், நடிகை சர்மிளா தாகூருக்கு பத்மபூஷன் விருதும் வழங்கப்பட்டது. பத்ம விருதுகள் வழங்கப்படுவதில் தென் இந்தியர்கள் புறக்கணிக்கப்படுவதாகக் கூறி, தனக்கு வழங்கப்பட்ட பத்ம பூஷன் விருதை பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி புறக்கணித்துள்ளார்.