'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
"வாண்டட், சால்ட் போன்ற ஹாலிவுட் படங்களில் நடித்தவர், ஏஞ்சலினா ஜோலி. ஹாலிவுட்டில், இவருக்கு, அழகு ஏஞ்சலினா என்ற பட்டப் பெயரும் உண்டு. படங்களில் நடிப்பதை காட்டிலும், மனிதாபிமானம் தொடர்பான விஷயங்களில், ரொம்பவும் ஆர்வம் காட்டுபவர், இவர். குறிப்பாக, அகதிகள் குறித்த விஷயத்தில், ஏராளமான உதவிகளை, இவர் செய்துள்ளார். இதன் காரணமாக, ஐ.நா., அகதிகள்ஆணையத்தின் சிறப்பு தூதராக, ஏஞ்சலினா நியமிக்கப்பட்டுள்ளார்.தன், மனிதாபிமான நடவடிக்கைகளின் அடுத்த கட்டமாக, ஆப்கானிஸ்தானில் வசிக்கும், அகதிகளின் குழந்தைகளுக்காக, பள்ளிக் கூடம் ஒன்றை துவக்கியுள்ளார். இந்த பள்ளியில், மாணவியர் மட்டுமே, அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில், 300 பேர், படிக்கின்றனர். தான், செயல்படுத்தும், அறக்கட்டளை மூலமாக, இந்த பள்ளியை அமைத்துள்ள, ஏஞ்சலினா, "இதேபோல், மேலும் சில பள்ளிகளை அமைக்க, முடிவு செய்துள்ளேன் என, கூறியுள்ளார்.